அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
பிரபல சின்னத்திரை நடிகரான மிர்ச்சி செந்தில் மதுரை, சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல ஹிட் தொடர்களில் நடித்து சின்னத்திரையில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அண்ணா சீரியலில் நடிகை நித்யா ராமுடன் இணைந்து நடித்து வருகிறார். இவர் அண்மையில் ஆன்லைன் மோசடி ஒன்றில் பணம் ஏமாந்துவிட்டதாக கூறி இன்ஸ்டாகிராமில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், 'எனக்கு தெரிந்த நபர் ஒருவரின் நம்பரிலிருந்து 15000 ரூபாய் பணம் கேட்டு வாட்சப் மெசேஜ் வந்தது. நான் வண்டி ஓட்டிக்கொண்டிருந்ததால் உடனடியாக அவர் சொல்லியிருந்த நம்பருக்கு பணம் அனுப்பிவிட்டேன். கடைசியில் பார்த்தால் அதில் வேறொருவரின் பெயர் இருந்தது. உடனடியாக அந்த நபரை போனில் அழைத்து கேட்டேன். அப்போது தான் அவர் சொன்னார். என் வாட்சப் ஹேக் செய்யப்பட்டுவிட்டது. காலையில் இருந்து 500 நபர்களுக்கு மேல் போன் செய்துவிட்டனர் என்று கூறினார். உடனடியாக சைபர் போலீஸில் புகார் அளித்துள்ளேன். தயவு செய்து மக்களே உஷாராக இருங்கள். யார் பணம் கேட்டாலும் ஒருமுறைக்கு இருமுறை உறுதி செய்துவிட்டு பணம் அனுப்புங்கள்' என்று கூறியிருக்கிறார்.