மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? | ஆண் ஆதிக்கம் இருப்பது கசப்பான உண்மை : கீர்த்தி சுரேஷ் | 'ஆண் பாவம் பொல்லாதது'..... முதல் பட்டியலில் நீளும் ஓடிடி ரிலீஸ்...! | சிக்கலில் இருந்து மீண்ட ‛கருப்பு' | விஜய் தேவரகொண்டா படத்தில் ‛தி மம்மி' பட வில்லன் | லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட் | கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை |

ரஜினி, நயன்தாரா, ஜோதிகா, பிரபு நடித்த சந்திரமுகி படம் பெரிய வெற்றி பெற்றது. தற்போது இதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதில் ரஜினி கேரக்டரில் ராகவா லாரன்சும், ஜோதிகா கேரக்டரில் கங்கனாவும் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது கங்கனா ரணவத் தனது போர்ஷனை நடித்து முடித்து படப்பிடிப்பு குழுவினருடன் விடைபெற்றுள்ளார்.
அவர் ராகவா லாரன்சுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தனது இன்ஸ்ட்ராகிராமில் எழுதியிருப்பதாவது: சந்திரமுகி 2 படத்தில் என்னுடைய போர்ஷனுக்கான படப்பிடிப்பு முடிவடைந்தது. இங்கு நான் சந்தித்த பல அற்புதமான மனிதர்களுக்கு விடைகொடுக்கிறேன் என்பது கடினமாகத்தான் உள்ளது.
இத்தனை நாட்களில் இதுவரை நான் ராகவா லாரன்ஸ் மாஸ்டருன் புகைப்படமே எடுக்கவில்லை. ஏனெனில், பெரும்பாலும் நாங்கள் படத்தின் காஸ்ட்யூமிலேதான் இருப்போம். அதனால், இன்று படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். பின்னணி நடனக் கலைஞராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர் இன்று வெற்றிகரமான இயக்குநராக, நடனக்கலைஞராக, நடிகராக, நல்ல மனிதராக வலம் வருகிறார். அவருடன் பணிபுரிந்தது எனக்குப் பெருமை. உங்களது அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி, என கூறியுள்ளார் கங்கனா.
“மிஸ் யூ கங்கனா மேடம்” என்ற கேக்கை வெட்டி இயக்குனர் பி.வாசு உள்ளிட்ட படக்குழுவினர் கங்கனாவை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.