ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
ஆர்ஆர்ஆர் படத்தை அடுத்து ராஜமவுலி இயக்கும் புதிய படத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடிக்கப் போகிறார். ஆப்பிரிக்க காடுகளில் நடைபெறும் கதைக்களத்தை மையமாகக் கொண்ட இந்த படத்திற்கும் ராஜமவுலியின் தந்தையான விஜயேந்திர பிரசாத்தே கதை எழுதி உள்ளார். இந்த படத்தில் மகேஷ்பாபு உடன் நடிக்கப் போகும் நடிகர்- நடிகைகளை ஒப்பந்தம் செய்யும் பணிகள் நடக்கின்றன. ஆர்ஆர்ஆர் படத்தின் ஆஸ்கர் பணியில் உள்ள ராஜமவுலி அது முடிந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கவும் திட்டமிட்டு இருக்கிறார்.
இந்தபடத்திற்கு முன்பாக திரிவிக்ரம் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் மகேஷ்பாபு. ஏற்கனவே ஒருக்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ளது. இப்படத்திற்காக தன்னை தயார்படுத்தி வரும் மகேஷ் பாபு, தற்போது தனது உடல் எடையை குறைத்து பிட்டாக மாறிக் கொண்டிருக்கிறார் . அதற்காக அவர் ஜிம்மில் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அது குறித்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் மகேஷ் பாபு.