தமிழ் சினிமாவில் மீண்டும் த்ரிஷா அலை | ஜுன் 9ம் தேதி போட்டியில் 'போர் தொழில், டக்கர்' | பானி பூரி: தமிழில் தயாராகும் புதிய வெப் தொடர் | சினிமா ஆகிறது முதல் போஸ்ட்மேன் கதை | பிம்பிளிக்கி பிலாப்பி: பிரான்ஸ் நாட்டின் லாட்டரி பின்னணியில் உருவாகும் படம் | 24 ஆண்டுகளுக்கு பிறகு படம் இயக்கும் பாரதி கணேஷ் | 2018 படத்தில் முதலில் நடிக்க மறுத்தேன் : டொவினோ தாமஸ் | எனக்கு கேன்சர் என்று சொல்லவில்லை : சிரஞ்சீவி விளக்கம் | கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற சுரேஷ்கோபியின் மகள் | ஷாருக்கானுடன் நடிப்பதற்கு ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் கேட்ட பாகிஸ்தான் நடிகர் |
இந்தியத் திரையுலகின் மதிப்பு மிக்க இசையமைப்பாளரான இளையராஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஐதராபாத்தில் இந்த மாதம் 26ம் தேதி பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளார். அது தொடர்பாக நேற்று ஐதராபாத்தில் அவருடைய ரசிகர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
அப்போது நடைபெற்ற கேள்வி, பதில் நிகழ்ச்சியில் “இசைக்கு டெக்னாலஜி எப்படி உதவுகிறது?,” என்ற கேள்வி இளையராஜாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த இளையராஜா, “இசை என்பது நமது வாழ்க்கையில் இசைக் கலைஞர்களின் டெக்னிக் ஆகத்தான் வருகிறது, டெக்னாலஜி மூலமாக வரவில்லை. இசை என்ற சக்தி மூலம் எனது ரசிகர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள மீண்டும் மேடைக்கு வருவது எனக்குப் பெருமையான ஒன்று. அந்த இசை இரவை மறக்க முடியாத நினைவுகளுடனும், நிகழ்ச்சியாகவும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள காத்திருக்க முடியவில்லை,” என்றார்.
தெலுங்கிலும் பல எண்ணற்ற மறக்க முடியாத பாடல்களைக் கொடுத்து அங்கும் தனக்கென தனி இடத்தைத் தன் இசையால் பிடித்துள்ளவர் இளையராஜா. ஐதராபாத்தில் உள்ள கச்சிபௌலி மைதானத்தில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் திரையுலகப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிகிறது.