இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தமிழ் சினிமாவில் ரூ.100 கோடி வசூல் என்பதே பெரிய விஷயமாக இருக்கும் இந்த காலத்தில் ஒரு படம் ரூ.300 கோடி வசூலைப் பெறவது சாதாரண விஷயமல்ல. கடந்தாண்டு இரண்டு படங்கள் 300 கோடி வசூலைக் கடந்து சாதனை புரிந்திருந்தது. கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்', மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' ஆகிய படங்கள்தான் அவை. 'விக்ரம்' படம் 400 கோடி வசூலையும், 'பொன்னியின் செல்வன்' படம் 500 கோடி வசூலையும் கடந்ததாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
அதற்கு முன்பாக ரஜினிகாந்த் நடித்த '2.0' படம் 600 கோடி வசூலைப் பெற்றிருந்தது. அதற்கடுத்து விஜய் நடித்த 'பிகில்' படம் 300 கோடி வசூலைக் கடந்திருந்தது. ரஜினிகாந்தின் 'கபாலி, எந்திரன்' ஆகியவை 300 கோடி வசூலைப் பெற்றதாகவும் தகவல் உண்டு. தற்போது விஜய் நடித்த 'வாரிசு' படம் 300 கோடி வசூலைப் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் இரண்டு படங்கள் 300 கோடி வசூலைப் பெற்றிருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 'வாரிசு' படத்துடன் வெளியான 'துணிவு' படத்தின் வசூல் பற்றி அதிகாரப்பூர்வத் தகவல் எதுவும் வெளியிடப்படாத நிலையில் 'வாரிசு' படத்தின் 300 கோடி வசூலை நேற்று அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே கொண்டாட ஆரம்பித்தனர் விஜய் ரசிகர்கள்.