வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி |
'சுந்தரபாண்டியன்' படம் வாயிலாக இயக்குனர் ஆனவர் எஸ்.ஆர்.பிரபாகரன். 'சத்ரியன், கொம்பு வெச்ச சிங்கம் டா' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இவர், 'பங்கஜம் ட்ரீம்ஸ் புரொடக்சன்ஸ்' என்ற என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். 'றெக்கை முளைத்தேன்' என்ற முதல் படத்தை தானே இயக்க உள்ளார். இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன் கதை நாயகியாக நடித்துள்ளார்.
கிரைம் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில், ஜெயப்பிரகாஷ், 'ஆடுகளம்' நரேன், போஸ்வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சுவாதிஸ், பிரபா, மெர்லின், நிதிஷா என்ற நான்கு புதுமுகங்களையும் அறிமுகம் செய்கிறார். எஸ்ஆர் பிரபாகரன் கூறியதாவது: கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் இது. ஒரு எழுத்தாளராக நல்ல கருத்துள்ள கதைகளை கதாநாயகர்களை மையப்படுத்திய படங்களில் சொல்ல முடியவில்லை. நல்ல கதைகளை தொடர்ந்து கமர்ஷியலாக பதிவுசெய்ய விரும்புகிறேன் அதற்காகத்தான் இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளேன். நல்ல கதைகளையும் நிறைய புதுமுக இயக்குனர்களையும் எனது தயாரிப்பு நிறுவனம் மூலம் அறிமுகப்படுத்த உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.