கிஸ் படத்தின் முதல் பார்வை வெளியானது : பிப்., 14ல் டீசர் | மீண்டும் இணையும் மம்முட்டி - நயன்தாரா கூட்டணி | ரூ.100 கோடி வசூலை கடந்த அஜித்தின் ‛விடாமுயற்சி' | மார்கோ படத்தை ஆக்சன் படம் என விளம்பர படுத்தியது குறித்து பகிர்ந்த உன்னி முகுந்தன்! | ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | அல்லு அர்ஜுனை இயக்கப் போகிறாரா அட்லி? | சீனியர் நடிகர்களின் படங்களால் காஜல் அகர்வாலுக்கு பாதிப்பு | நடிகை பார்வதி நாயருக்கு ‛டும் டும் டும்': சென்னை தொழிலதிபரை மணந்தார் | சாவா படத்திற்கு முன்பதிவு சிறப்பு | ஓராண்டுக்கு பிறகு ஓடிடியில் வரப்போகும் ரஜினியின் லால் சலாம் |
விஜய், அஜித் அறிமுகமான அதே காலகட்டத்திலேயே தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சரவணன். ஆரம்ப காலத்தில் சில ஹிட் படங்களை கொடுத்தார். பார்ப்பதற்கு நடிகர் விஜயகாந்த் போன்ற சாயலில் இருக்கிறார் என பலரும் பாராட்டுக்களாக சொன்னாலும் அதுவே அவருக்கு மைனஸ் பாயிண்டாக அமைந்ததால், பெரிய அளவில் அவரால் சோபிக்க முடியவில்லை. அதைத்தொடர்ந்து பருத்திவீரன் படத்தில் கார்த்தியின் சித்தப்பு கதாபாத்திரத்தில் நடித்து சித்தப்பு சரவணன் என்று அழைக்கும் அளவுக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வெளிச்சம் பெற்றார். தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் நேற்று எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியாகி உள்ள ‛நான் கடவுள் இல்லை' என்கிற படத்தில் கொடூரமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சரவணன்.
இதைத்தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்திலும் முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார் சரவணன். படக்குழுவினரிடம் இருந்து இவர் நடிப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் தற்போது நான் கடவுள் இல்லை படத்தின் புரமோஷன் பேட்டிகளில் ஜெயிலர் படத்தில் நடித்து வருவதை உறுதிப்படுத்தி உள்ளார்.
படத்தில் நடித்த அனுபவம் குறித்து இவர் கூறும்போது, ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துடன் 30 நிமிடங்கள் வரும்படியான காட்சிகளில் நடித்துள்ளேன். படம் வெளியானதும் நிச்சயமாக என்னை மக்கள் திட்டுவார்கள். ரஜினி ரசிகனாக இருந்த எனக்கு இத்தனை நாள் கழித்து அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார் சரவணன்.. இதன் மூலமாக ஜெயிலர் படத்தில் அவர் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார் என்பது உறுதியாகி உள்ளது