ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் |
விஜய், அஜித் அறிமுகமான அதே காலகட்டத்திலேயே தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சரவணன். ஆரம்ப காலத்தில் சில ஹிட் படங்களை கொடுத்தார். பார்ப்பதற்கு நடிகர் விஜயகாந்த் போன்ற சாயலில் இருக்கிறார் என பலரும் பாராட்டுக்களாக சொன்னாலும் அதுவே அவருக்கு மைனஸ் பாயிண்டாக அமைந்ததால், பெரிய அளவில் அவரால் சோபிக்க முடியவில்லை. அதைத்தொடர்ந்து பருத்திவீரன் படத்தில் கார்த்தியின் சித்தப்பு கதாபாத்திரத்தில் நடித்து சித்தப்பு சரவணன் என்று அழைக்கும் அளவுக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வெளிச்சம் பெற்றார். தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் நேற்று எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியாகி உள்ள ‛நான் கடவுள் இல்லை' என்கிற படத்தில் கொடூரமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சரவணன்.
இதைத்தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்திலும் முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார் சரவணன். படக்குழுவினரிடம் இருந்து இவர் நடிப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் தற்போது நான் கடவுள் இல்லை படத்தின் புரமோஷன் பேட்டிகளில் ஜெயிலர் படத்தில் நடித்து வருவதை உறுதிப்படுத்தி உள்ளார்.
படத்தில் நடித்த அனுபவம் குறித்து இவர் கூறும்போது, ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துடன் 30 நிமிடங்கள் வரும்படியான காட்சிகளில் நடித்துள்ளேன். படம் வெளியானதும் நிச்சயமாக என்னை மக்கள் திட்டுவார்கள். ரஜினி ரசிகனாக இருந்த எனக்கு இத்தனை நாள் கழித்து அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார் சரவணன்.. இதன் மூலமாக ஜெயிலர் படத்தில் அவர் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார் என்பது உறுதியாகி உள்ளது