எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
திருமணத்திற்கு பிறகு ரொம்பவே பிசியாகிவிட்டார் ஹன்சிகா. தமிழில் பார்ட்னர் படத்தில் நடித்து முடித்துள்ள அவர், ரவுடி பேபி, கார்டியன், அரண்மணை 4ம் பாகம் படத்தில் நடிக்கிறார். இதுதவிர இகோர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது ஆர்.கண்ணன் இயக்கும் காந்தாரி படத்தில் நடித்து வருகிறார்.
திருமணத்திற்கு பிறகு காந்தாரி படத்தில் நடிப்பதற்காக சென்னை வந்த ஹன்சிகா ஒரே கட்டமாக படத்தை நடித்து முடித்து விட்டார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்போது சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு சென்று வழிபட்ட ஹன்சிகா படப்பிடிப்பு முடிந்த நிலையிலும் நேற்று காளிகாம்பாள் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அவருடன் இயக்குனரும், தயாரிப்பாளருமான ஆர்.கண்ணனும் உடன் சென்றார்.