அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
தொலைக்காட்சி பிரபலமான தாடி பாலாஜியும் அவரது மனைவி நித்யாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஊடக வெளிச்சம் பெற்றனர். அதேசமயம் அவர்களது குடும்ப விவகாரமும், சண்டையும் கூட மீடியாவில் பேசுபொருளானது. தற்போது பாலாஜியை பிரிந்து வாழ்ந்து வரும் நித்யா, மகள் போஷிகாவுடன் சென்னை மாதவரம் பகுதியில் சாஸ்திரி நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நித்யா பக்கத்துவீட்டுக்காரரின் கார் மீது கல் வீசி உடைத்த புகாரில் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து ஜாமீனில் வந்துள்ள நித்யா தனது கைது குறித்து கூறுகையில், 'அவர் பெயர் மணி. ஓய்வு பெற்ற ஆசிரியர். தற்போது மளிகை கடை நடத்தி வருகிறார். எனக்கும் என் கணவருக்கும் பிரச்னை நடக்கும் போதெல்லாம் அவர் என் கணவருக்கே சப்போர்ட்டாக இருப்பார். பாலாஜி என்னை அடிப்பதை வேடிக்கை பார்ப்பார். எனவே எங்களுக்குள் சுமூகமான நட்பு கிடையாது. பொங்கல் தினத்தில் கூட என்னுடன் சண்டை போட்டார். என்னை பற்றி அவதூறாக பேசுவார். இப்போது அவருடைய காரை நான் சேதப்படுத்தியதாக பொய்யாக புகார் அளித்துள்ளார். சம்பவம் அன்று நான் துணிவு படம் பார்த்துவிட்டு வந்தேன். அப்போது எடுத்த சிசிடிவி காட்சி தான் வைரலாகி வருகிறது. போலீசாரிடம் என் மீதான புகாரை எடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டியிருக்கிறார். எனவே, அவரை எதிர்கொள்வது என்ற முடிவில், நானும் அவர் மீது புகார் அளிக்க உள்ளேன்' என்று கூறியுள்ளார்.