மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
கிட்டத்தட்ட 70 வயதை தொட்டுள்ள நடிகர் மம்முட்டி மலையாள திரையுலகில் இப்போதும் ஹீரோவாக நடித்து வருகிறார் என்றாலும் ஒவ்வொரு படத்திலும் கதையின் நாயகனாக வித்தியாசமான கதாபாத்திரங்களில் தன்னை ஒப்படைத்து நடித்து வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் கூட ஒரு எளிய கிராமத்து மனிதனாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார். அதே சமயம் தற்போது அவரது நடிப்பில் உருவாகியுள்ள இன்னொரு படமான காதல் ; தி கோர் என்கிற படத்தில் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மம்முட்டி.
இந்த படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்துள்ளார் ஜோதிகா. மம்முட்டியுடன் இவர் இணைந்து நடிப்பது இதுவே முதன்முறை. அது மட்டுமல்ல பல வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மலையாளத்தில் நடித்துள்ளார் ஜோதிகா. இந்த படத்தை மம்முட்டியின் சொந்த நிறுவனமான மம்முட்டி கம்பெனியே தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்கிற அப்டேட்டையும் தயாரிப்பு நிறுவனமே தற்போது வெளியிட்டுள்ளது.