இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கிட்டத்தட்ட 70 வயதை தொட்டுள்ள நடிகர் மம்முட்டி மலையாள திரையுலகில் இப்போதும் ஹீரோவாக நடித்து வருகிறார் என்றாலும் ஒவ்வொரு படத்திலும் கதையின் நாயகனாக வித்தியாசமான கதாபாத்திரங்களில் தன்னை ஒப்படைத்து நடித்து வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் கூட ஒரு எளிய கிராமத்து மனிதனாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார். அதே சமயம் தற்போது அவரது நடிப்பில் உருவாகியுள்ள இன்னொரு படமான காதல் ; தி கோர் என்கிற படத்தில் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மம்முட்டி.
இந்த படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்துள்ளார் ஜோதிகா. மம்முட்டியுடன் இவர் இணைந்து நடிப்பது இதுவே முதன்முறை. அது மட்டுமல்ல பல வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மலையாளத்தில் நடித்துள்ளார் ஜோதிகா. இந்த படத்தை மம்முட்டியின் சொந்த நிறுவனமான மம்முட்டி கம்பெனியே தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்கிற அப்டேட்டையும் தயாரிப்பு நிறுவனமே தற்போது வெளியிட்டுள்ளது.