10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி | லோகேஷ் கனகராஜ், அமீர் கான் படம், பேச்சுவார்த்தையில்… | வெளியீட்டிற்குத் தடை இருந்தாலும் இன்று 'வா வாத்தியார்' நிகழ்ச்சி | ஜப்பானில் வெளியாகும் புஷ்பா 2 | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு | டாக்சிக் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | தொடர் சிக்கலில் சிங்கிள் தியேட்டர்கள் : விடிவுகாலம் பிறக்குமா? | 23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் | ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் |

தமிழ் திரையுலகில் எப்படி நடிகர் சூர்யாவோ, அதேபோல மலையாள திரையுலகில் நடிகர் பிரித்விராஜ் முன்னணி நடிகராக வலம் வருகிறார். சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். நடிகர் பிரித்திவிராஜ் தற்போது தெலுங்கில் சலார் படத்தில் வில்லனாகவும் இந்தியில் படே மியான் சோட்டே மியான் படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சூர்யாவும், பிரித்விராஜூம் அவர்களின் மனைவியர் உடன் சேர்ந்து சந்திப்பு நிகழ்த்தியுள்ளனர்.
இது குறித்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள நடிகர் பிரித்விராஜ், ‛‛எங்களை உற்சாகப்படுத்திய நண்பர்களுடன் என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் பிரித்விராஜ் பிஸியாக நடிக்க தொடங்கிய சமயத்தில் ஜோதிகாவுடன் இணைந்து மொழி என்கிற படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது சூர்யாவும் பிரித்விராஜூம் குடும்பத்துடன் சந்தித்திருப்பது பல புதிய யூகங்களையு எதிர்பார்ப்புகளையும் கிளப்பி விட்டுள்ளது.