மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா! நாளை பர்ஸ்ட் லுக்! | 'துரந்தர்' 2ம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! - பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் | 'இருமுடி' படத்தில் காவேரி ஆக பிரியா பவானி சங்கர்! | பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை! | நானி, வெங்கி அட்லூரி கூட்டணி படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' | மீண்டும் விஜய் பட தலைப்பில் புதிய பட அறிவிப்பு! | "எமோ எமோ இதி" ரோசன் மெக்கா, பிரீத்தி முகுந்தன் புதிய தெலுங்கு பட அறிவிப்பு! | "மகான் 2ம் பாகம் உருவாகிறது" - கார்த்திக் சுப்பராஜ் தகவல்! | சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா? |

தமிழ் திரையுலகில் எப்படி நடிகர் சூர்யாவோ, அதேபோல மலையாள திரையுலகில் நடிகர் பிரித்விராஜ் முன்னணி நடிகராக வலம் வருகிறார். சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். நடிகர் பிரித்திவிராஜ் தற்போது தெலுங்கில் சலார் படத்தில் வில்லனாகவும் இந்தியில் படே மியான் சோட்டே மியான் படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சூர்யாவும், பிரித்விராஜூம் அவர்களின் மனைவியர் உடன் சேர்ந்து சந்திப்பு நிகழ்த்தியுள்ளனர்.
இது குறித்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள நடிகர் பிரித்விராஜ், ‛‛எங்களை உற்சாகப்படுத்திய நண்பர்களுடன் என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் பிரித்விராஜ் பிஸியாக நடிக்க தொடங்கிய சமயத்தில் ஜோதிகாவுடன் இணைந்து மொழி என்கிற படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது சூர்யாவும் பிரித்விராஜூம் குடும்பத்துடன் சந்தித்திருப்பது பல புதிய யூகங்களையு எதிர்பார்ப்புகளையும் கிளப்பி விட்டுள்ளது.