இத்தாலி கார் ரேஸ்: 3வது இடம் பிடித்து மீண்டும் அஜித் அணி அசத்தல் | அட்லி படத்தில் நடிக்க அல்லு அர்ஜுனுக்கு 175 கோடி சம்பளமா? | விமானத்தில் செல்லும்போது மொபைலை தொலைத்த பூஜா ஹெக்டே! | விக்ரமின் 'வீர தீர சூரன்' படத்தின் சென்சார், ரன்னிங் டைம் வெளியானது! | 75 நாட்களில் திரைக்கு வரும் தக்லைப்! போஸ்டர் வெளியிட்ட படக்குழு!! | வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‛தி வெர்டிக்ட்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பயங்கரவாத சம்பவங்களை ஒப்பிட்டு கடலோர மக்களுக்காக ரஜினி வீடியோ வெளியீடு | ஜூன் மாதத்தில் துவங்கும் சூர்யா 46 படப்பிடிப்பு! | கார்த்திக்கு ஜோடியாகும் கல்யாணி பிரியதர்ஷன்! | 'எல் 2 எம்புரான்' படத்தின் பட்ஜெட் இவ்வளவுதானா ? |
தமிழ் திரையுலகில் எப்படி நடிகர் சூர்யாவோ, அதேபோல மலையாள திரையுலகில் நடிகர் பிரித்விராஜ் முன்னணி நடிகராக வலம் வருகிறார். சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். நடிகர் பிரித்திவிராஜ் தற்போது தெலுங்கில் சலார் படத்தில் வில்லனாகவும் இந்தியில் படே மியான் சோட்டே மியான் படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சூர்யாவும், பிரித்விராஜூம் அவர்களின் மனைவியர் உடன் சேர்ந்து சந்திப்பு நிகழ்த்தியுள்ளனர்.
இது குறித்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள நடிகர் பிரித்விராஜ், ‛‛எங்களை உற்சாகப்படுத்திய நண்பர்களுடன் என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் பிரித்விராஜ் பிஸியாக நடிக்க தொடங்கிய சமயத்தில் ஜோதிகாவுடன் இணைந்து மொழி என்கிற படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது சூர்யாவும் பிரித்விராஜூம் குடும்பத்துடன் சந்தித்திருப்பது பல புதிய யூகங்களையு எதிர்பார்ப்புகளையும் கிளப்பி விட்டுள்ளது.