‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
2023ம் ஆண்டு தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை சிறப்பாகவே ஆரம்பமாகி உள்ளது. விஜய் நடித்து 'வாரிசு', அஜித் நடித்த 'துணிவு' இரண்டு படங்களும் பொங்கல் போட்டியாக வெளியாகிறது. இரண்டு படங்களுமே கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக சிறப்பாக ஓடி வருகிறது.
'வாரிசு' படத்தின் வசூல் 250 கோடியைக் கடந்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. 'துணிவு' படத்தின் வசூலைப் பற்றி இதுவரை அப்படத் தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கவில்லை என்றாலும் நிச்சயம் 175 கோடி வசூலைக் கடந்திருக்கும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரண்டு படங்களின் வசூலை சேர்த்து 425 கோடி வசூல் கடந்துள்ளது.
நேற்று விடுமுறை தினம் என்பதால் தியேட்டர்களில் இரண்டு படங்களுக்கும் கூட்டத்தைப் பார்க்க முடிந்தது. நாளையும், நாளை மறுநாளும் விடுமுறை நாட்கள் என்பதாலும், அனேகமாக இரண்டு படங்களும் குறிப்பிட்ட வசூலைப் பெற வாய்ப்புள்ளது. 'வாரிசு' குழுவினர் எப்படியும் அடுத்த சில நாட்களில் 275 கோடி என்று அறிவித்து விடுவார்கள். 'துணிவு' குழுவினர் அறிவிக்கவில்லை என்றாலும் ஓட்ட முடிவில் 200 கோடி வசூலைத் தொடலாம் என்கிறார்கள்.
இரண்டு படங்களும் சேர்ந்து 500 கோடி வசூலைத் தொடுமா என்பதுதான் இப்போதைய எதிர்பார்ப்பு. அதற்கு வாய்ப்பு குறைவுதான் என்றாலும் ஓடிடி, சாட்டிலைட் உரிமை ஆகியவற்றை சேர்த்தால் அந்தத் தொகை கடந்து விடும் என்பதும் உண்மை. இரண்டு படங்கள் போட்டியுடன் வந்தாலும் இரண்டும் ஓடி முடிக்கும் போது, வாரிசு 300 கோடியும், துணிவு 200 கோடியும் வசூல் நிச்சயம் என்று சொல்கிறார்கள், பொறுத்திருந்து பார்ப்போம்.