மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
கன்னட சினிமாவில் அறிமுகமாகி இப்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் ஹிந்தியிலும் கால்பதித்து அங்கும் நடித்து வருகிறார். இந்நிலையில், காந்தாரா படத்தை பார்க்கவில்லை என கூறியது, கன்னட சினிமாவை புறக்கணிப்பது மாதிரியாக அவர் நடந்து கொள்வது என அவர் மீது தொடர் விமர்சனங்கள் எழுந்தன. இதனால் சிலமாதங்களாக ராஷ்மிகா நிறைய டிரோல்களில் சிக்குகிறார்.
தன் மீதான விமர்சனங்களுக்கும், டிரோல்களுக்கும் ராஷ்மிகா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது : ‛‛ஓராண்டாகவே என்னை நிறையபேர் டிரோல் செய்கிறார்கள். உடற்பயிற்சி செய்தால் பையன் என்கிறார்கள். இல்லையெனில் பருமனாக இருப்பதாக சொல்கிறார்கள். பேசாமல் இருந்தால் திமிரு என்கிறார்கள். பேசினாலும் தவறு என்கிறார்கள். நான் என்ன தான் செய்வது. சினிமாவை விட்டு நான் விலக வேண்டும் என நினைக்கிறார்களா. என்னதான் உங்களுக்கு பிரச்னை. உங்களின் வார்த்தைகள் என்னை காயப்படுத்துகின்றன. எனக்கு எதிராக வெறுப்புணர்வை பரப்புவது ஏன் என புரியவில்லை'' என்றார்.