தணிக்கையில் ‛யு' சான்றிதழ் பெற்ற ‛வித் லவ்' | பழைய காதல் பிரேக்கப் குறித்து பேசிய மிருணாள் தாக்கூர் | 2வது சிம்பொனி: அப்டேட் கொடுத்த இளையராஜா | அஜித்தின் 64வது படத்தை தயாரிக்கும் ஏகே நிறுவனம் | ஜனநாயகனைத் தொடர்ந்து அடுத்த பட வேலைகளில் இறங்கிய வினோத் | இது புதிய இந்தியா : துரந்தர் 2 படத்தின் டீசர் வெளியானது | மீண்டும் ஒரு போராளி கதாபாத்திரத்தில் அதர்வா | மழை மனிதன் ஆக மாறினேன் ; 'துரந்தர்' சுவாரஸ்யம் பகிர்ந்த மாதவன் | திருப்தியுடன் வெளியே வருவீர்கள் : ரஜினி ரசிகர்களுக்கு சிபி சக்கரவர்த்தி வாக்குறுதி | ராமுக்கு என்னதான் ஆச்சு? நம்பிக்கையுடன் பேசிய ஜீத்து ஜோசப் |

கன்னட சினிமாவில் அறிமுகமாகி இப்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் ஹிந்தியிலும் கால்பதித்து அங்கும் நடித்து வருகிறார். இந்நிலையில், காந்தாரா படத்தை பார்க்கவில்லை என கூறியது, கன்னட சினிமாவை புறக்கணிப்பது மாதிரியாக அவர் நடந்து கொள்வது என அவர் மீது தொடர் விமர்சனங்கள் எழுந்தன. இதனால் சிலமாதங்களாக ராஷ்மிகா நிறைய டிரோல்களில் சிக்குகிறார்.
தன் மீதான விமர்சனங்களுக்கும், டிரோல்களுக்கும் ராஷ்மிகா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது : ‛‛ஓராண்டாகவே என்னை நிறையபேர் டிரோல் செய்கிறார்கள். உடற்பயிற்சி செய்தால் பையன் என்கிறார்கள். இல்லையெனில் பருமனாக இருப்பதாக சொல்கிறார்கள். பேசாமல் இருந்தால் திமிரு என்கிறார்கள். பேசினாலும் தவறு என்கிறார்கள். நான் என்ன தான் செய்வது. சினிமாவை விட்டு நான் விலக வேண்டும் என நினைக்கிறார்களா. என்னதான் உங்களுக்கு பிரச்னை. உங்களின் வார்த்தைகள் என்னை காயப்படுத்துகின்றன. எனக்கு எதிராக வெறுப்புணர்வை பரப்புவது ஏன் என புரியவில்லை'' என்றார்.