சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளிவந்த தெலுங்குப் படம் 'ஆர்ஆர்ஆர்'. பான் இந்தியா படமாக வெளிவந்த இந்தப் படம் ரூ.1000 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளியது.
இப்படம் இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வமாக ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்படவில்லை. என்றாலும் நேரடியாக பல பிரிவுகளில் 'ஆர்ஆர்ஆர்' படம் விண்ணப்பிக்கப்பட்டது. இருப்பினும் இரண்டு பிரிவுகளில் இப்படம் விருக்கான போட்டியில் தேர்வாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான விருது, சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான விருது ஆகிய பிரிவுகளில் 'ஆர்ஆர்ஆர்' படம் தேர்வாகலாம் என்கிறார்கள். இன்று மாலை இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு விருதுக்குத் தேர்வாகும் படங்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது. 'ஆர்ஆர்ஆர்' எதில் தேர்வாகும் என தெலுங்குத் திரையுலகினர் மட்டுமல்ல, இந்தியத் திரையுலகினரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான கோல்டன் குளோப் விருதை ஏற்கெனவே வென்றுள்ளது.