'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளிவந்த தெலுங்குப் படம் 'ஆர்ஆர்ஆர்'. பான் இந்தியா படமாக வெளிவந்த இந்தப் படம் ரூ.1000 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளியது.
இப்படம் இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வமாக ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்படவில்லை. என்றாலும் நேரடியாக பல பிரிவுகளில் 'ஆர்ஆர்ஆர்' படம் விண்ணப்பிக்கப்பட்டது. இருப்பினும் இரண்டு பிரிவுகளில் இப்படம் விருக்கான போட்டியில் தேர்வாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான விருது, சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான விருது ஆகிய பிரிவுகளில் 'ஆர்ஆர்ஆர்' படம் தேர்வாகலாம் என்கிறார்கள். இன்று மாலை இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு விருதுக்குத் தேர்வாகும் படங்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது. 'ஆர்ஆர்ஆர்' எதில் தேர்வாகும் என தெலுங்குத் திரையுலகினர் மட்டுமல்ல, இந்தியத் திரையுலகினரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான கோல்டன் குளோப் விருதை ஏற்கெனவே வென்றுள்ளது.