‛பொன்னியின் செல்வன்' பார்க்க மாட்டேன்: திரைப்பட இயக்குனர் லெனின்பாரதி | வெகுமதியாய் கொடுத்த ரூபாயை பிரேம் போட்டு வச்சுருக்கேன்: 'ருக்மணி' பாபு | தமிழில் ரீமேக் ஆகும் ஹிந்தி படம்! | ரீ என்ட்ரி குறித்து நெகிழ்ச்சியாக பகிர்ந்த மீரா ஜாஸ்மின்! | ஆர்யா - ஹிப் ஹாப் ஆதி படங்களின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? | எஸ்.ஜே.சூர்யா- பிரியா பவானி சங்கரின் லிப்லாக் காட்சியுடன் வெளியான பொம்மை டிரைலர்! | டென்மார்க்கிற்கு சுற்றுப்பயணம் சென்ற சூர்யா - ஜோதிகா! | தருமை ஆதீனத்திடம் ஆசி பெற்ற ரஜினிகாந்தின் இளைய மகள் | லியோ படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | விக்ரம் பிரபு புதிய படத்தின் ரிலீஸ் தேதி இதோ! |
மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது பாகம் வெளியாவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் இந்த படத்துக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறார்.
அந்த மனுவில், அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் வரலாற்றை திரித்து இயக்கி உள்ளதாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார். முக்கியமாக இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வந்தியத்தேவன் பெயரை தவறாக பயன்படுத்தியிருக்கிறார். வரலாற்று அடிப்படையில் படங்களை எடுக்கும்போது எடுப்பதற்கு முன்பு உரிய ஆராய்ச்சி மேற்கொண்டிருக்க வேண்டும்.
வரலாற்றில் உள்ள உண்மை பெயர்களை கல்கி பயன்படுத்தும் நிலையில் போர் தந்திரங்களில் சிறந்து விளங்கிய சோழர்களுக்கு அவமதிப்பு ஏற்படுத்து வகையில் மணிரத்னம் வரலாற்றை திரித்துள்ளதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு மத்திய அரசு மற்றும் இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை ஆகியவற்றிடம் இந்த புகாரை அளித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டுமென அந்த மனுவில் அவர் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.