நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது பாகம் வெளியாவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் இந்த படத்துக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறார்.
அந்த மனுவில், அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் வரலாற்றை திரித்து இயக்கி உள்ளதாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார். முக்கியமாக இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வந்தியத்தேவன் பெயரை தவறாக பயன்படுத்தியிருக்கிறார். வரலாற்று அடிப்படையில் படங்களை எடுக்கும்போது எடுப்பதற்கு முன்பு உரிய ஆராய்ச்சி மேற்கொண்டிருக்க வேண்டும்.
வரலாற்றில் உள்ள உண்மை பெயர்களை கல்கி பயன்படுத்தும் நிலையில் போர் தந்திரங்களில் சிறந்து விளங்கிய சோழர்களுக்கு அவமதிப்பு ஏற்படுத்து வகையில் மணிரத்னம் வரலாற்றை திரித்துள்ளதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு மத்திய அரசு மற்றும் இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை ஆகியவற்றிடம் இந்த புகாரை அளித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டுமென அந்த மனுவில் அவர் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.