தனுஷ் 55ல் இணைந்தார் ஸ்ரீலீலா | போட்டோகிராபர் செய்த செயல் : கசப்பான அனுபவம் பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் | அட்லி, அல்லு அர்ஜுன் படப்பிடிப்பில் பிப்ரவரி முதல் இணையும் ஜான்வி கபூர் | ரஜினி 173வது படத்தின் கதை ஹாலிவுட் படத்தின் தழுவலா? | ஜூலையில் வெளியாகும் சூர்யா 46வது படம் | பெத்தி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக் : இரவு காட்சிகளை பகலில் படமாக்கிய முதல் படம் | 2027 ஏப்ரல் 7 : வாரணாசி வெளியீட்டு தேதி அறிவிப்பு | கேரளா ஸ்டோரி இரண்டாவது பாகமும் பரபரப்பு கிளப்புகிறது | வேள்பாரி கதையில் நடிக்கப்போவது யார்? : ரஜினிக்கு கவுரவ வேடமா? |

தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நம்பர் 1 காமெடி நடிகராக இருந்தவர் சந்தானம். முன்னணி ஹீரோக்கள் பலரது படங்களில் நடித்துள்ளார். அவரது காமெடிக்காக ஓடிய படங்கள் என்றும் சில படங்களை உதாரணமாகச் சொல்லலாம். தங்களது படங்களில் அவர் இருக்க வேண்டும் என விரும்பிய ஹீரோக்களும் உண்டு.
ஆனால், சந்தானம் ஹீரோவாக விரும்பி 2015ல் வெளிவந்த 'இனிமே இப்படித்தான்' படம் மூலம் நாயகனாக மாறினார். அதன் பிறகு நாயகனாக மட்டுமே நடித்து வருகிறார். அப்படி அவர் நடித்த படங்களில் “தில்லுக்கு துட்டு, ஏ 1, பாரிஸ் ஜெயராஜ்' ஆகிய படங்கள்தான் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதன் பின் அவர் நடித்த 'டிக்கிலோனா' படம் நேரடியாக ஓடிடியில் வெளியானாலும் வரவேற்பைப் பெற்ற படமாக அமைந்தது.
அவர் நடித்து கடைசியாக வெளிவந்த 'சபாபதி, குளு குளு, ஏஜன்ட் கண்ணாயிரம்' ஆகிய படங்கள் மோசமான தோல்விப் படங்களாக அமைந்தது. அவர் எப்போதோ நடித்து முடித்த 'சர்வர் சுந்தரம்' படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இருப்பினும் தற்போது 'கிக்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் சந்தானம் மீண்டும் காமெடி நடிகராக நடிக்க சம்மதித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள படத்திலும், சுந்தர் சி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ள 'அரண்மனை 4' படத்திலும் சந்தானம் நடிக்கப் போகிறார் என்கிறார்கள். சந்தானத்தின் இந்த திடீர் மாற்றத்திற்கான காரணம் தெரியவில்லை.