மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பஹத் பாசில் தற்போது முதல்முறையாக கன்னட திரை உலகில் நுழைந்து தூமம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக நடிக்கும் அபர்ணா பாலமுரளியும் முதன் முறையாக கன்னட திரை உலகில் நுழைந்துள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குனர் பவன்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக விவியன் ராதாகிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் டாக்குமெண்ட்ரி பட இயக்குனரும் கூட. தற்போது இவர் மீது கர்நாடகாவை சேர்ந்த மாடல் ஒருவரும் மாடல் ஒருங்கிணைப்பாளரும் என இரண்டு பெண்கள் மீ டூ புகார் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.
இதுகுறித்து அந்த மாடல் அழகி சோசியல் மீடியா பக்கம் மூலமாக வெளியிட்டுள்ள பதிவில், டாக்குமென்ட்ரி படப்பிடிப்பு சமயத்தில் விவியன் ராதாகிருஷ்ணன் தனது உடலில் தொடக்கூடாத பகுதிகளை தொட்டதாகவும் மேலும் அவரது உடலை தனது உடல் மேல் படச்செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று அந்த மாடல் ஒருங்கிணைப்பாளர் கூறும்போது விவியன் ராதாகிருஷ்ணனுடன் பணியாற்றிய நாட்களில் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல தொல்லைகளுக்கு ஆளானதாக குறிப்பிட்டுள்ளார்.