சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை | திரைகதையில் திருத்தம்: வா வாத்தியாருக்கு மறுபடப்பிடிப்பு | பிளாஷ்பேக் : அரசு விருது பெற்ற முதல் தமிழ் படம் | பிளாஷ்பேக்: மலேசிய வாசுதேவன் இயக்கிய ஒரே படம் | பிளாஷ்பேக் : இந்தியா முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோல்வி அடைந்த 'அப்னா தேஷ்' | ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி |
விஜய்யின் 'வாரிசு', அஜித்தின் 'துணிவு' இரண்டு படங்களும் நாளை மறுநாள் ஜனவரி 11ம் தேதி ஒரே நாளில் வெளியாகிறது. தமிழ் சினிமாவில் தற்போதைய டாப் ஹீரோக்களில் இவர்கள் இருவரும் முதல் இரண்டு இடங்களில் இருக்கிறார்கள். இப்படி போட்டியில் வெளியிடுவதால் இரண்டு படங்களுக்குமான பேச்சு, பரபரப்பு, எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. அதை இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும் திட்டமிட்டேதான் செய்துள்ளனர் என்கிறார்கள்.
இரண்டு படங்களுக்குமான முன்பதிவு கடந்த இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அடுத்த வாரம் 18ம் தேதி வரையில் முன்பதிவுகளைத் திறந்து வைத்துள்ளனர். 17ம் தேதி வரையிலும் இரண்டு படங்களுக்குமான முன்பதிவுகள் அமோகமாக நடந்துள்ளன. ஒரு சில காட்சிகள், ஒரு சில இருக்கைகளைத் தவிர மற்ற காட்சிகள் அனைத்தும் ஹவுஸ்புல்லாக ஆகியிருக்கிறது.
இந்த முன்பதிவு மூலமாகவே தியேட்டர்களுக்காக நடந்த வியாபாரத்தை இரண்டு படங்களும் எடுத்துவிடும் என்கிறார்கள். இரண்டு படங்களும் நன்றாக இல்லை என்றாலும் கூட அது படங்களின் வசூலை பாதிக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை. படம் பற்றிய கருத்துக்களும், விமர்சனங்களும் வருவதற்கு முன்பாகவே ஹவுஸ்புல் ஆகிவிட்டதால் அவை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. இரண்டு படங்களையும் ஒரே நாளில் வெளியிடும் தயாரிப்பாளர்களின் 'தந்திரம்' பலித்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.