ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய்யின் 'வாரிசு', அஜித்தின் 'துணிவு' இரண்டு படங்களும் நாளை மறுநாள் ஜனவரி 11ம் தேதி ஒரே நாளில் வெளியாகிறது. தமிழ் சினிமாவில் தற்போதைய டாப் ஹீரோக்களில் இவர்கள் இருவரும் முதல் இரண்டு இடங்களில் இருக்கிறார்கள். இப்படி போட்டியில் வெளியிடுவதால் இரண்டு படங்களுக்குமான பேச்சு, பரபரப்பு, எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. அதை இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும் திட்டமிட்டேதான் செய்துள்ளனர் என்கிறார்கள்.
இரண்டு படங்களுக்குமான முன்பதிவு கடந்த இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அடுத்த வாரம் 18ம் தேதி வரையில் முன்பதிவுகளைத் திறந்து வைத்துள்ளனர். 17ம் தேதி வரையிலும் இரண்டு படங்களுக்குமான முன்பதிவுகள் அமோகமாக நடந்துள்ளன. ஒரு சில காட்சிகள், ஒரு சில இருக்கைகளைத் தவிர மற்ற காட்சிகள் அனைத்தும் ஹவுஸ்புல்லாக ஆகியிருக்கிறது.
இந்த முன்பதிவு மூலமாகவே தியேட்டர்களுக்காக நடந்த வியாபாரத்தை இரண்டு படங்களும் எடுத்துவிடும் என்கிறார்கள். இரண்டு படங்களும் நன்றாக இல்லை என்றாலும் கூட அது படங்களின் வசூலை பாதிக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை. படம் பற்றிய கருத்துக்களும், விமர்சனங்களும் வருவதற்கு முன்பாகவே ஹவுஸ்புல் ஆகிவிட்டதால் அவை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. இரண்டு படங்களையும் ஒரே நாளில் வெளியிடும் தயாரிப்பாளர்களின் 'தந்திரம்' பலித்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.