சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

விஜய்யின் 'வாரிசு', அஜித்தின் 'துணிவு' இரண்டு படங்களும் நாளை மறுநாள் ஜனவரி 11ம் தேதி ஒரே நாளில் வெளியாகிறது. தமிழ் சினிமாவில் தற்போதைய டாப் ஹீரோக்களில் இவர்கள் இருவரும் முதல் இரண்டு இடங்களில் இருக்கிறார்கள். இப்படி போட்டியில் வெளியிடுவதால் இரண்டு படங்களுக்குமான பேச்சு, பரபரப்பு, எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. அதை இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும் திட்டமிட்டேதான் செய்துள்ளனர் என்கிறார்கள்.
இரண்டு படங்களுக்குமான முன்பதிவு கடந்த இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அடுத்த வாரம் 18ம் தேதி வரையில் முன்பதிவுகளைத் திறந்து வைத்துள்ளனர். 17ம் தேதி வரையிலும் இரண்டு படங்களுக்குமான முன்பதிவுகள் அமோகமாக நடந்துள்ளன. ஒரு சில காட்சிகள், ஒரு சில இருக்கைகளைத் தவிர மற்ற காட்சிகள் அனைத்தும் ஹவுஸ்புல்லாக ஆகியிருக்கிறது.
இந்த முன்பதிவு மூலமாகவே தியேட்டர்களுக்காக நடந்த வியாபாரத்தை இரண்டு படங்களும் எடுத்துவிடும் என்கிறார்கள். இரண்டு படங்களும் நன்றாக இல்லை என்றாலும் கூட அது படங்களின் வசூலை பாதிக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை. படம் பற்றிய கருத்துக்களும், விமர்சனங்களும் வருவதற்கு முன்பாகவே ஹவுஸ்புல் ஆகிவிட்டதால் அவை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. இரண்டு படங்களையும் ஒரே நாளில் வெளியிடும் தயாரிப்பாளர்களின் 'தந்திரம்' பலித்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.