அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
துணிவு படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் தனது 62வது படத்தில் நடிக்க போகிறார் அஜித்குமார். ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படத்தில் ஒரு பிரபலமான வில்லன் நடிகரைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என்று பலரிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வந்த விக்னேஷ் சிவன் தற்போது தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்துள்ள அரவிந்த்சாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
அதோடு, தனி ஒருவன் படத்தைப் போலவே இந்த படத்திலும் ஒரு மாஸான வில்லனாக அரவிந்த்சாமி நடிக்க இருப்பதாகவும் கூறுகிறார்கள். மேலும் இதற்கு முன்பு சுரேஷ்மேனன் இயக்கத்தில் அரவிந்த்சாமி -ரகுவரன் இணைந்து நடித்த பாசமலர்கள் என்ற படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார் அஜித் குமார். அதையடுத்து அவர்கள் எந்தப் படத்திலும் இணையவில்லை. இந்த நிலையில் தற்போது ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க போகிறார் அரவிந்தசாமி. இது குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது.