கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
துணிவு படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் தனது 62வது படத்தில் நடிக்க போகிறார் அஜித்குமார். ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படத்தில் ஒரு பிரபலமான வில்லன் நடிகரைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என்று பலரிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வந்த விக்னேஷ் சிவன் தற்போது தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்துள்ள அரவிந்த்சாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
அதோடு, தனி ஒருவன் படத்தைப் போலவே இந்த படத்திலும் ஒரு மாஸான வில்லனாக அரவிந்த்சாமி நடிக்க இருப்பதாகவும் கூறுகிறார்கள். மேலும் இதற்கு முன்பு சுரேஷ்மேனன் இயக்கத்தில் அரவிந்த்சாமி -ரகுவரன் இணைந்து நடித்த பாசமலர்கள் என்ற படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார் அஜித் குமார். அதையடுத்து அவர்கள் எந்தப் படத்திலும் இணையவில்லை. இந்த நிலையில் தற்போது ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க போகிறார் அரவிந்தசாமி. இது குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது.