14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
சமீபத்தில், சமந்தா நடித்த 'யசோதா' படம், ஐந்து மொழிகளில் வெளியானது. அடுத்து, 'சாகுந்தலம்' படம் வெளியாக உள்ளது. விஜய் தேவரகொண்டாவுடன், 'குஷி' என்ற படத்திலும் சமந்தா நடித்து வருகிறார். இதனிடையே, 'மயோசிடிஸ்' என்ற அரிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு உள்ள சமந்தா, 'யசோதா' பட டப்பிங்'கின் போதே சிகிச்சை பெறத் துவங்கினார். தொடர் சிகிச்சையில் சமந்தா தேறி வந்தாலும், படப்பிடிப்பில் பங்கேற்காமல் இருந்தார்.
இந்நிலையில், நோயின் தீவிரத்தைத் தொடர்ந்து, மருத்துவர்களின் ஆலோசனைப்படி, உயர்ரக சிகிச்சைக்காக சமந்தா, தென்கொரியா நாட்டிற்கு செல்ல திட்டமிட்டு உள்ளார். இதனால், நடிப்புக்கு நீண்ட காலம் ஓய்வு கொடுக்க, சமந்தா திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது சகுந்தலம் படத்தில் நடித்துள்ள சமந்தா அப்படத்தின் டப்பிங் வேலையை முடித்த தகவலை வெளியிட்ட நிலையில், நடிகை சமந்தா மும்பை விமான நிலைத்திற்கு சென்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில், சமந்தா எப்போதும் இல்லாத வகையில் மிகவும் சோகமாகவும், உடல் மெலிந்தும் நடந்து வருகிறார். இந்த காட்சிகளை பார்த்த அவரது ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.