நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு |

நடிகை சமந்தா சொந்தமாக 'டிரலாலா மூவிங் பிக்சர்ஸ்' என்ற பெயரில் படத் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து 'சுபம்' என்ற படத்தைத் தயாரித்து இந்த வருடம் வெளியிட்டார். அப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அடுத்து இரண்டாவது தயாரிப்பாக 'மா இண்டி பங்காரம்' என்ற படத்தைத் தயாரிக்கிறார். அதற்கான பூஜையில் தனது காதலர் ராஜ் நிடிமொரு உடன் கலந்து கொண்டார். முதல் படத் தயாரிப்பிலும் காதலர் ராஜ் நிடிமொரு, சமந்தாவுக்கு உதவியாக இருந்தார். தற்போது இரண்டாவது படத் தயாரிப்பிலும் அது தொடர்கிறது.
இப்படத்தில் சமந்தா, குல்ஷன் தேவய்யா, திகநாத், கவுதமி, மஞ்சுஷா ஆகியோர் நடிக்க உள்ளார்கள். 'ஓ பேபி' படத்தை இயக்கிய நந்தினி ரெட்டி இந்தப் படத்தை இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். பூஜையுடன் படப்பிடிப்பையும் ஆரம்பித்துவிட்டார்கள்.