டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

நடிகை சமந்தா சொந்தமாக 'டிரலாலா மூவிங் பிக்சர்ஸ்' என்ற பெயரில் படத் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து 'சுபம்' என்ற படத்தைத் தயாரித்து இந்த வருடம் வெளியிட்டார். அப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அடுத்து இரண்டாவது தயாரிப்பாக 'மா இண்டி பங்காரம்' என்ற படத்தைத் தயாரிக்கிறார். அதற்கான பூஜையில் தனது காதலர் ராஜ் நிடிமொரு உடன் கலந்து கொண்டார். முதல் படத் தயாரிப்பிலும் காதலர் ராஜ் நிடிமொரு, சமந்தாவுக்கு உதவியாக இருந்தார். தற்போது இரண்டாவது படத் தயாரிப்பிலும் அது தொடர்கிறது.
இப்படத்தில் சமந்தா, குல்ஷன் தேவய்யா, திகநாத், கவுதமி, மஞ்சுஷா ஆகியோர் நடிக்க உள்ளார்கள். 'ஓ பேபி' படத்தை இயக்கிய நந்தினி ரெட்டி இந்தப் படத்தை இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். பூஜையுடன் படப்பிடிப்பையும் ஆரம்பித்துவிட்டார்கள்.