மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

மம்முட்டி நடித்து முடித்துள்ள நண்பகல் நேரத்து மயக்கம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இதனை லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கி உள்ளார். அடுத்து ஸ்படிகம் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் 2023ம் ஆண்டின் முதல் படத்தை அவர் அறிவித்துள்ளார்.
இது மம்முட்டி தயாரிக்கும் 4வது படம். இந்த படத்தை ஒளிப்பதிவாளர் ராபி வர்க்கீஸ் ராஜ் இயக்குகிறார். படத்திற்கு ஷாபி திரைக்கதை அமைக்கிறார், ரோனி டேவிட் ராஜ் வசனம் எழுதுகிறார். முகமது ரஹில் ஒளிப்பதிவு செய்கிறார். சுஷின் ஷியாம் இசை அமைக்கிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.
இது ஒரு துப்பறியும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். படத்தின் துவக்க விழா நடந்தது. இதில் மம்முட்டி கலந்து கொண்டு படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் கருப்பு சட்டையுடன் கலந்து கொண்டது பற்றிய விவாதங்கள் தொடங்கி உள்ளது.




