'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சிரஞ்சீவி உடன் வால்டேர் வீரய்யா, பாலகிருஷ்ணா உடன் வீர சிம்ஹா ரெட்டி, பிரபாஸ் உடன் சலார் போன்ற படங்களில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். இவற்றில் சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள படங்கள் வருகிற சங்கராந்திக்கு திரைக்கு வருகிறது. இந்த நிலையில் ஸ்ருதிஹாசன் அளித்த ஒரு பேட்டியில் சீனியர் ஹீரோக்களுடன் ஜோடியாக நடிப்பது ஏன்? என்று ஒரு கேள்வி முன் வைக்கப்பட்டிருக்கிறது.
அதற்கு அவர், நடிப்பு துறையில் வயது குறைந்தவர்கள் வயது அதிகமானவர்கள் என்ற வித்தியாசம் எல்லாம் நான் பார்ப்பதில்லை. வயது என்பது ஒரு நம்பர் மட்டுமே. நடிக்கும் திறமை இருந்தால் யாருடனும் யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். அதுமட்டுமின்றி வயதான ஹீரோக்களுடன் இரு மடங்கு வயது குறைவான நடிகைகள் ஜோடி சேர்ந்து நடிப்பது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. இது நீண்ட காலமாகவே சினிமாவின் நடைபெற்று வருகிறது. இதற்கு நான் ஒன்றும் விதிவிலக்கல்ல. அதிகம் சம்பளம் தரப்படுவதினால் தான் இது போன்ற ஹீரோக்களுடன் நான் நடிப்பதாக ஒரு கருத்து ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் என்னை பொறுத்தவரை அனைத்து படங்களுக்கும் ஒரே மாதிரியான சம்பளம் தான் வாங்குகிறேன். இளம் ஹீரோ, வயதான ஹீரோ என்றெல்லாம் நான் யாரையும் பிரித்து பார்ப்பதில்லை என்கிறார் ருதிஹாசன்.