ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாகுபலி, பாகுபலி 2 , ஆர்ஆர்ஆர் போன்ற பிரமாண்ட படங்களை இயக்கிய ராஜமவுலி அடுத்தபடியாக மகேஷ்பாபு நடிப்பில் தனது புதிய படத்தை இயக்குவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்த ஆர்ஆர்ஆர் படம் சமீபத்தில் ஜப்பானில் திரையிடப்பட்டது.
இந்த நிலையில் ராஜமவுலியின் படங்களுக்கு வழக்கமாக கதை எழுதி வரும் அவரது தந்தையான விஜயேந்திர பிரசாத் தற்போது ராஜமவுலி - மகேஷ்பாபு இணையும் படம் குறித்த ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
அவர் கூறுகையில், ஏற்கனவே ராஜமவுலி இயக்கிய பாகுபலி படம் இரண்டு பாகங்களாக உருவானது போன்று அடுத்து மகேஷ்பாபுவை வைத்து அவர் இயக்கும் படமும் இரண்டு பாகங்களும் அதற்கு மேலும் உருவாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த படத்தின் ஒவ்வொரு பாகத்திலும் ஹீரோ கேரக்டர் ஒன்று தான். என்றாலும் கதைக்களமானது வெவ்வேறாக இருக்கும். அந்த வகையில் இந்த படம் நான்கு பாகங்கள் உருவாவதற்கும் வாய்ப்பு உள்ளது. இந்த படத்திற்கான கதை தற்போது தயாராகி விட்டதால் 2023ம் ஆண்டில் படப்பிடிப்பு துவங்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.