என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
பாகுபலி, பாகுபலி 2 , ஆர்ஆர்ஆர் போன்ற பிரமாண்ட படங்களை இயக்கிய ராஜமவுலி அடுத்தபடியாக மகேஷ்பாபு நடிப்பில் தனது புதிய படத்தை இயக்குவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்த ஆர்ஆர்ஆர் படம் சமீபத்தில் ஜப்பானில் திரையிடப்பட்டது.
இந்த நிலையில் ராஜமவுலியின் படங்களுக்கு வழக்கமாக கதை எழுதி வரும் அவரது தந்தையான விஜயேந்திர பிரசாத் தற்போது ராஜமவுலி - மகேஷ்பாபு இணையும் படம் குறித்த ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
அவர் கூறுகையில், ஏற்கனவே ராஜமவுலி இயக்கிய பாகுபலி படம் இரண்டு பாகங்களாக உருவானது போன்று அடுத்து மகேஷ்பாபுவை வைத்து அவர் இயக்கும் படமும் இரண்டு பாகங்களும் அதற்கு மேலும் உருவாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த படத்தின் ஒவ்வொரு பாகத்திலும் ஹீரோ கேரக்டர் ஒன்று தான். என்றாலும் கதைக்களமானது வெவ்வேறாக இருக்கும். அந்த வகையில் இந்த படம் நான்கு பாகங்கள் உருவாவதற்கும் வாய்ப்பு உள்ளது. இந்த படத்திற்கான கதை தற்போது தயாராகி விட்டதால் 2023ம் ஆண்டில் படப்பிடிப்பு துவங்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.