'நந்தி விருதுகள்' பெருமையை மீட்க விரும்பும் ஆந்திரா | சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? |
எண்பது, தொண்ணூறுகளில் மலையாளம் மற்றும் தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷோபனா. தமிழில் தளபதி, பாட்டுக்கு ஒரு தலைவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ஷோபனா மலையாளத்தில் நடித்த மணிசித்திரதாழு படம் அனைத்து மொழி ரசிகர்களுக்கும் பிடித்தமான ஒரு படம். அந்த படத்தில் அவரது நடிப்பும் குறிப்பாக கிளைமாக்ஸில் அவர் ஆடும் அந்த நடனமும் வெகு பிரசித்தம்.
அந்த படத்தில் கங்கா மற்றும் நாகவல்லி என்கிற கதாபாத்திரங்களில் நடித்திருந்த ஷோபனா நாகவல்லி கதாபாத்திரமாக மாறி 'ஒரு முறை வந்து பார்த்தாயா' என்கிற தமிழ் பாடலுக்கு கிளைமாக்ஸில் ஆவேசமாக நடனமாடி இருப்பார். தற்போது தான் நடத்தி வரும் நடன பயிற்சி பள்ளியில் தனது மாணவிகளுக்கு அந்த பாடலுக்கான நடனத்தை சொல்லித்தரும் ஷோபனா, அதுகுறித்தும் அந்த பாடல் படமாக்கப்பட்ட சமயத்தில் நடந்த விஷயங்கள் குறித்தும் ஒரு வீடியோவை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் ஷோபனா கூறும்போது, “அந்த பாடல் நவராத்திரி மண்டபத்தில் படமாக்கப்பட்டது. அதன் தரைத்தளம் முழுவதும் ஜொலிக்கும்படியாக இருக்க வேண்டும் என்பதற்காக எண்ணெய் சேர்த்து துடைக்கப்பட்டிருந்தது. அதனால் அதில் துள்ளிக்குதித்து நடனமாடுவதற்கு எனக்கு பயமாக இருந்தது. வழுக்கி விழுந்து விடுவோமோ என்கிற அளவிற்கு தரை மிகவும் வழுவழுப்பாக இருந்தது. எனக்கு மட்டுமல்ல என்னுடன் ஆடிய ஸ்ரீதருக்கும் அந்த பயம் இருந்தது. இருந்தாலும் சமாளித்து ஆடினோம்” என்று கூறியுள்ளார்