இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் |
எண்பது, தொண்ணூறுகளில் மலையாளம் மற்றும் தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷோபனா. தமிழில் தளபதி, பாட்டுக்கு ஒரு தலைவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ஷோபனா மலையாளத்தில் நடித்த மணிசித்திரதாழு படம் அனைத்து மொழி ரசிகர்களுக்கும் பிடித்தமான ஒரு படம். அந்த படத்தில் அவரது நடிப்பும் குறிப்பாக கிளைமாக்ஸில் அவர் ஆடும் அந்த நடனமும் வெகு பிரசித்தம்.
அந்த படத்தில் கங்கா மற்றும் நாகவல்லி என்கிற கதாபாத்திரங்களில் நடித்திருந்த ஷோபனா நாகவல்லி கதாபாத்திரமாக மாறி 'ஒரு முறை வந்து பார்த்தாயா' என்கிற தமிழ் பாடலுக்கு கிளைமாக்ஸில் ஆவேசமாக நடனமாடி இருப்பார். தற்போது தான் நடத்தி வரும் நடன பயிற்சி பள்ளியில் தனது மாணவிகளுக்கு அந்த பாடலுக்கான நடனத்தை சொல்லித்தரும் ஷோபனா, அதுகுறித்தும் அந்த பாடல் படமாக்கப்பட்ட சமயத்தில் நடந்த விஷயங்கள் குறித்தும் ஒரு வீடியோவை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் ஷோபனா கூறும்போது, “அந்த பாடல் நவராத்திரி மண்டபத்தில் படமாக்கப்பட்டது. அதன் தரைத்தளம் முழுவதும் ஜொலிக்கும்படியாக இருக்க வேண்டும் என்பதற்காக எண்ணெய் சேர்த்து துடைக்கப்பட்டிருந்தது. அதனால் அதில் துள்ளிக்குதித்து நடனமாடுவதற்கு எனக்கு பயமாக இருந்தது. வழுக்கி விழுந்து விடுவோமோ என்கிற அளவிற்கு தரை மிகவும் வழுவழுப்பாக இருந்தது. எனக்கு மட்டுமல்ல என்னுடன் ஆடிய ஸ்ரீதருக்கும் அந்த பயம் இருந்தது. இருந்தாலும் சமாளித்து ஆடினோம்” என்று கூறியுள்ளார்