ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் 'இ மெயில்' | மூத்த நடனக் கலைஞர்களை கவுரவிக்கும் “டான்ஸ் டான்” விழா | மழையில் மூழ்கிய செட்டுகள் : இனி எப்போது ஷூட்டிங்? | “ரசிகர்களின் ரசனைமிகு வில்லன்” நடிகர் ரகுவரன். | 'ரொம்ப வலிக்குது' : மகள் பற்றி விஜய் ஆண்டனி மனைவி உருக்கம் | இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இந்திய இசைக்குயில் எம்.எஸ் சுப்புலக்ஷ்மி. | அம்பிகா, ராதா ஸ்டுடியோவில் படப்பிடிப்புகளுக்குத் தடை ? | 3 மணி நேரம் ஓடப் போகும் 'சலார்' | ஒரே நாளில் இரண்டு 'சர்ப்ரைஸ்' கொடுத்த சமந்தா | பூரண குணமடைந்து வீடு திரும்பினார் விஜயகாந்த் |
நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர், காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்து வெளியில் வந்தவரை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்டனர். குறிப்பாக விஜய்யின் வாரிசு படம், அவரது அரசியல் பிரவேசம் பற்றி கேட்டனர்.
இதற்கு பதிலளித்து ஷோபா சந்திரசேகர் கூறியதாவது: நான் அம்பாளை தரிசிக்க வந்தேன். நிறைவான தரிசனம் கிடைத்தது, நீண்ட நேரம் அம்பாளை தரிசித்தேன். உலகம் முழுக்க உள்ள மக்கள் மனநிம்மதியுடன், வியாதிகள் எதுவுமின்றி நலமுடன் வாழவேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன்.
விஜய்யின் அடுத்த படம் பற்றி என்னிடம் கேட்கிறீர்கள். அவர் இப்போது நடித்து வரும் வாரிசு படத்தில் என்னவாக நடிக்கிறார் என்பதுகூட எனக்குத் தெரியாது. குடும்ப படம் என்பது மட்டும் தெரியும். விஜய் படம் நல்லா ஓடணும்னு எல்லோரும் பிரார்த்தனை பண்ணுங்க. விஜய் அரசியல் பற்றி எனக்கு ஒண்ணுமே தெரியாது. அது அவர் முடிவெடுப்பது. கடவுள் என்ன நினைக்கிறாரோ அது நடக்கும். அதுக்கு மேல் எனக்கு எதவும் தெரியாது. என்றார்.