பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சில வருடங்களுக்கு முன்பு நடிகர் சல்மான்கானுடன் இணைந்து ஒன்றாக சுற்றி வந்ததால் பரபரப்பாக பேசப்பட்டவர். அதைத்தொடர்ந்து சமீபகாலமாக மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருடன் இணைத்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். சுகேஷிடம் இருந்து கிட்டத்தட்ட 7 கோடி ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த நகைகள் பரிசுப்பொருட்களை பெற்றுள்ளதாக அவர் மீதும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் நடிகை ஜாக்குலின் பஹ்ரைனுக்கு செல்ல வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.
இந்த இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது ஜாக்குலின் பெர்னாண்டஸ், நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது நீதிபதி அவரிடம் இந்த மனுவை நீங்களே வாபஸ் பெற்றுக் கொள்ளுங்கள். இல்லையென்றால் நாங்கள் இந்த மனுவின் மீது நீதிமன்ற உத்தரவை பிறப்பிக்க நேரிடும் என்று கண்டிப்புடன் கூறிவிட்டார். இதனைத் தொடர்ந்து தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசித்த ஜாக்குலின் தனது மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார். ஜாக்குலின் பெர்னாண்டஸ் வெளிநாட்டை சேர்ந்தவர் என்பதால் அவர் ஊர் சென்றால் இங்கே திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதால் நீதிமன்றம் இந்த மனுவை நிராகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.