லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
1989 ஆம் ஆண்டில் கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் நடித்த கரகாட்டக்காரன் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் கனகா. அதன்பிறகு ரஜினியுடன் அதிசய பிறவி உள்ளிட்ட பல படங்களில் நடித்த கனகா, ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு வெளியேறி விட்டார். அதோடு தனக்கு ஏற்பட்ட காதல் தோல்வி காரணமாக அவர் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டில் அவர் வெளியிட்ட ஒரு வீடியோவில், தனக்கு 50 வயதுக்கு மேல் ஆகிவிட்டதாக குறிப்பிட்டு இருந்த கனகா, விரைவில் தனது உடை, ஹேர் ஸ்டைல் என அனைத்தையும் மாற்றிக்கொண்டு மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுக்கப் போவதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரத்தில் தனது தந்தையுடன் வசித்து வரும் கனகாவின் வீட்டில் நேற்று மாலை திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டு அவரது வீட்டில் இருந்து புகைமண்டலம் கிளம்பியுள்ளது. இது குறித்து தீயணைப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்துள்ளார் கள். அதோடு கனகா வீட்டின் பூஜை அறையில் விளக்கின் தீப்பொறி பட்டு வீட்டுக்குள் தீ பரவியதாகவும், அதை அவர்கள் கவனிக்காமல் விட்டு விட்டதால் அங்குள்ள துணிகள் உள்பட பல பொருட்கள் எரிந்து சாம்பலாகி விட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.