ராம நவமியை முன்னிட்டு 'ஆதி புருஷ்' பட புதிய போஸ்டர் வெளியீடு | 200 சவரன் நகை கொள்ளை - புதிய புகார் அளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! | மணிரத்னத்தின் மீதான வழக்கு தள்ளுபடி | ஸ்கை டைவிங்கில் அசத்திய அஞ்சு குரியன் | பிரதமரை சந்தித்த ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்பட குழுவினர் | சமந்தா நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்கிறாரா? | மதுபான பிசினஸில் இறங்கிய ஷாரூக்கான் மகன் ஆரியன்கான்! | பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து மருதநாயகத்தை தூசி தட்டும் கமல் | எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து சொன்ன அஜித்குமார் | தீண்டாமை பிரச்னையா : தியேட்டர் நிர்வாகம் விளக்கம் ; ஊழியர்கள் மீது வழக்குபதிவு |
பூவே பூச்சூடவா உள்பட பல படங்களில் ஹீரோவாக நடித்தவர் எஸ் .வி .சேகர். அதன் பிறகு காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வருபவர், அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். அதோடு அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டும் சில சிக்கல்களிலும் சிக்கிக் கொண்டு வருகிறார் எஸ்.வி.சேகர். இப்படியொரு நிலைகள் தற்போது எஸ்.சி.சேகர், வெளியிட்டுள்ள ஒரு பதிவு பலருக்கு அச்சத்தை கொடுத்திருக்கிறது. அதாவது உடல் வலி மற்றும் உடல் உஷ்ணத்தை குறைப்பதற்காக பலரும் ஆயில் மசாஜ் செய்வது வழக்கமான ஒன்றுதான்.
அதேபோல் தான் எஸ்.வி. சேகரும் சமீபத்தில் ஆயில் மசாஜ் செய்து இருக்கிறார். ஆனால் அதன் பிறகு அவருக்கு கடுமையான உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின்பு குணமடைந்துள்ளார் எஸ்.வி.சேகர். இதையடுத்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இனிமேல் ஆயில் மசாஜ் எடுத்துக் கொள்ளவே மாட்டேன். ஒவ்வொரு நாளும் வாழ்க்கையில் ஒரு பாடங்களை கற்றுக் கொண்டு வருகிறேன் என்று தெரிவித்திருக்கிறார். இப்படி எஸ்.வி.சேகர் வெளியிட்டுள்ள பதிவு தொடர்ந்து ஆயில் மசாஜ் செய்து வரும் நபர்களுக்கு புதிய அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.