ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
பூவே பூச்சூடவா உள்பட பல படங்களில் ஹீரோவாக நடித்தவர் எஸ் .வி .சேகர். அதன் பிறகு காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வருபவர், அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். அதோடு அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டும் சில சிக்கல்களிலும் சிக்கிக் கொண்டு வருகிறார் எஸ்.வி.சேகர். இப்படியொரு நிலைகள் தற்போது எஸ்.சி.சேகர், வெளியிட்டுள்ள ஒரு பதிவு பலருக்கு அச்சத்தை கொடுத்திருக்கிறது. அதாவது உடல் வலி மற்றும் உடல் உஷ்ணத்தை குறைப்பதற்காக பலரும் ஆயில் மசாஜ் செய்வது வழக்கமான ஒன்றுதான்.
அதேபோல் தான் எஸ்.வி. சேகரும் சமீபத்தில் ஆயில் மசாஜ் செய்து இருக்கிறார். ஆனால் அதன் பிறகு அவருக்கு கடுமையான உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின்பு குணமடைந்துள்ளார் எஸ்.வி.சேகர். இதையடுத்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இனிமேல் ஆயில் மசாஜ் எடுத்துக் கொள்ளவே மாட்டேன். ஒவ்வொரு நாளும் வாழ்க்கையில் ஒரு பாடங்களை கற்றுக் கொண்டு வருகிறேன் என்று தெரிவித்திருக்கிறார். இப்படி எஸ்.வி.சேகர் வெளியிட்டுள்ள பதிவு தொடர்ந்து ஆயில் மசாஜ் செய்து வரும் நபர்களுக்கு புதிய அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.