பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படத்தில் நாகார்ஜுனா, அமீர்கான், உபேந்திரா என பல்வேறு திரையுலகங்களை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருப்பது ஒரு ஆச்சரியம் என்றால், எண்பதுகளின் மத்தியில் ரஜினிகாந்த் படங்களில் வில்லனாக நடித்து புகழ் பெற்ற நடிகர் சத்யராஜ் கிட்டத்தட்ட 38 வருடங்கள் கழித்து மீண்டும் அவருடன் இணைந்து நடித்திருப்பது இன்னொரு ஆச்சரியமாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. 'மிஸ்டர் பாரத்' படத்தைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவில்லை.
அதே சமயம் அதற்கு பின் சத்யராஜ் ஹீரோவாக மாறி மீண்டும் குணசித்திர கதாபாத்திரங்களுக்கு வந்து விட்டார். இன்னொரு பக்கம் நடிகர் ரஜினிகாந்த் மீது அரசியல் ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் பலமுறை கடுமையான விமர்சனங்களையும் சத்யராஜ் செய்து வந்தார். ஷங்கர் இயக்கத்தில் 'சிவாஜி' படத்தில் முதலில் வில்லனாக நடிக்க சத்யராஜை கேட்டபோது அவர் முடியாது என்று மறுத்துவிட்டார். இந்த நிலையில் தான் 'கூலி' படத்தில் இவர்கள் இணைந்து நடிப்பது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய சத்யராஜ், ரஜினிகாந்த் இருவருமே தங்களுக்குள் அரசியல் ரீதியாக, கருத்தியல் ரீதியாக சில கருத்து வேறுபாடுகள் இருப்பதை ஒப்புக்கொண்டாலும் தங்களுக்குள் உள்ள நட்பு மற்றும் புரிதலையும் வெளிப்படையாக பேசினார்கள்.
குறிப்பாக சத்யராஜ் பேசும்போது, “47 வருடங்களாக இந்த சினிமாவில் நீங்கள் இருக்கிறீர்களா என்று லோகேஷ் கனகராஜ் என்னை ஆச்சரியமாக கேட்டார். 47 வருடமாக நான் ஒரு நடிகராக இருப்பது பெரிய ஆச்சரியம் இல்லை. 50 வருடங்களாக ஒருவர் சூப்பர் ஸ்டாராகவே இருக்கிறார்.. அதுதான் பெரிய ஆச்சரியம்” என்று ரஜினிகாந்தை புகழ்ந்தார் சத்யராஜ். மேலும் படத்தில் ரஜினிகாந்தின் நண்பராக வருகிறார் சத்யராஜ். அவரது இந்த பேச்சு ரஜினி ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.