14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். சமீபத்தில் டில்லியில் 17வயது மாணவி ஒருவர் சாலையில் ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு ஆளானார். இதுதொடர்பாக கங்கனா பதிவிட்டுள்ளதாவது : ‛‛சாலையோர ரோமியோ ஒருவரால் டீனேஜ் பருவத்தில் என் சகோதரி ரங்கோலி ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு உள்ளானார். அதிலிருந்து அவர் மீண்டு வர 52 அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருந்தது. உடலாலும், மனதாலும் பாதிக்கப்பட்டாள். எனது குடும்பமும் கடும் வேதனைக்கு உள்ளானது.
அந்த சம்பவத்திற்கு பின் என்னை யாராவது கடந்து சென்றால் என் மீதும் ஆசிட் வீசுவார்களோ என்ற பயம் எனக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. அந்த பயத்தால் யாரேனும் முகம் தெரியாத நபர்கள் என்னை கடந்து சென்றால் முகத்தை மூடிக் கொள்வேன். இதுபோன்ற சம்பவங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதுமாதிரியான குற்றங்களை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்''.
இவ்வாறு கங்கனா தெரிவித்துள்ளார்.