பழசை மறக்காத சூரி | ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் எக்ஸ் கணக்கு | இரண்டு பாகங்களாக உருவாகும் கார்த்தியின் 29வது படம்! | ஆண் குழந்தை தான் வாரிசுக்கு அடையாளமா... சீரஞ்சீவி பேச்சால் சர்ச்சை | 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இசை வெளியீட்டு விழாவை தனுஷ் புறக்கணித்தது ஏன்? | நான் காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன் - இசையமைப்பாளர் தேவா | பவதாரிணி பிறந்தநாள்: வெங்கட்பிரபு உருக்கம் | பிளாஷ்பேக்: இளையராஜா இசை, தயாரிப்பில் சறுக்கிய திரைப்படம் | 10 ஆண்டுகளுக்கு முன்பே உருவான கதை 'டிராகன்' | பிளாஷ்பேக்: பெண் உளவாளியாக நடித்த முதல் நடிகை |
தெலுங்குத் திரையுலகின் சீனியர் ஹீரோக்களில் ஒருவர் சிரஞ்சீவி. அவருடைய மகன் ராம் சரணும் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். ராம் சரண் பத்து வருடங்களுக்கு முன்பாக 2012ம் ஆண்டில் உபாசானாவைத் திருமணம் செய்து கொண்டார். இருவரும் அவர்களது முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என ராம் சரணின் அப்பா சிரஞ்சீவி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
“ஸ்ரீ அனுமன்ஜியின் ஆசீர்வாதங்களுடன், உபாசானா, ராம் சரண் இருவரும் அவர்களது முதல் குழந்தையை எதிர்பார்க்கிறார்கள் என்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன்,” என குறிப்பிட்டுள்ளார். சிரஞ்சீவி ரசிகர்களும், ராம் சரண் ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
ராம் சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து வருகிறார்.