25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
தெலுங்குத் திரையுலகின் சீனியர் ஹீரோக்களில் ஒருவர் சிரஞ்சீவி. அவருடைய மகன் ராம் சரணும் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். ராம் சரண் பத்து வருடங்களுக்கு முன்பாக 2012ம் ஆண்டில் உபாசானாவைத் திருமணம் செய்து கொண்டார். இருவரும் அவர்களது முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என ராம் சரணின் அப்பா சிரஞ்சீவி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
“ஸ்ரீ அனுமன்ஜியின் ஆசீர்வாதங்களுடன், உபாசானா, ராம் சரண் இருவரும் அவர்களது முதல் குழந்தையை எதிர்பார்க்கிறார்கள் என்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன்,” என குறிப்பிட்டுள்ளார். சிரஞ்சீவி ரசிகர்களும், ராம் சரண் ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
ராம் சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து வருகிறார்.