ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கங்கனா ரனவத். பாலிவுட் ஹீரோக்களைப் பற்றி கடுமையான கருத்துக்களுடன் விமர்சிக்கும் ஒரு தைரியமான நடிகை எனப் பெயரெடுத்தவர். பாலிவுட்டின் நெப்போட்டிசத்தை எதிர்த்து அதிகமாகக் குரல் கொடுத்த ஒரே நடிகை என்றும் சொல்லலாம்.
ஹிந்தியில் அவரது ஆரம்ப கால கட்டங்களிலேயே 2008ம் ஆண்டு தமிழில் ஜீவா இயக்கத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடித்து வெளிவந்த 'தாம் தூம்' படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார். ஆனால், அந்தப் படம் பெரிய வெற்றியையும் பெறவில்லை, அவரையும் யாரும் கவனிக்கவில்லை. அதே வருடத்தில் ஹிந்தியில் வெளிவந்த 'பேஷன்' படம் மூலம் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் கடந்த வருடம் வெளிவந்த ஜெயலலிதாவின் பயோபிக் படம் என்று சொல்லப்பட்ட 'தலைவி' படத்தில் நடித்தார். அந்தப் படமும் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பைப் பெறவில்லை. இருந்தாலும் தமிழ் சினிமா மீதுள்ள ஆர்வத்தில் மூன்றாவது முறையாக 'சந்திரமுகி 2' படத்தின் மூலம் மீண்டும் வருகிறார். அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது. முதலிரண்டு படங்கள் அவருக்கு சிறப்பாக அமையாத நிலையில் 'சந்திரமுகி 2' கங்கனாவுக்கு கவனம் ஈர்க்கும் படமாக அமையுமா என்பது படம் வெளிவரும் போது தெரியும்.