ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சினிமாவில் பொறுமை அவசியம் ; நல்ல படங்களுக்காக காத்திருக்கிறேன்... : புதுமுகம் ஜீவிதா! | தம்பதிகளின் உறவுச் சிக்கலை பேசும் ‛மதர்' | சிங்கப்பூரில் மறு தணிக்கை செய்யப்பட்ட 'கூலி' | பிளாஷ்பேக் : நண்பருக்காக சம்பளம் வாங்காமல் நடித்த மோகன் | பிளாஷ்பேக் : அக்கா குடும்பத்திற்காக சினிமாவை துறந்த தங்கை |
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கங்கனா ரனவத். பாலிவுட் ஹீரோக்களைப் பற்றி கடுமையான கருத்துக்களுடன் விமர்சிக்கும் ஒரு தைரியமான நடிகை எனப் பெயரெடுத்தவர். பாலிவுட்டின் நெப்போட்டிசத்தை எதிர்த்து அதிகமாகக் குரல் கொடுத்த ஒரே நடிகை என்றும் சொல்லலாம்.
ஹிந்தியில் அவரது ஆரம்ப கால கட்டங்களிலேயே 2008ம் ஆண்டு தமிழில் ஜீவா இயக்கத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடித்து வெளிவந்த 'தாம் தூம்' படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார். ஆனால், அந்தப் படம் பெரிய வெற்றியையும் பெறவில்லை, அவரையும் யாரும் கவனிக்கவில்லை. அதே வருடத்தில் ஹிந்தியில் வெளிவந்த 'பேஷன்' படம் மூலம் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் கடந்த வருடம் வெளிவந்த ஜெயலலிதாவின் பயோபிக் படம் என்று சொல்லப்பட்ட 'தலைவி' படத்தில் நடித்தார். அந்தப் படமும் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பைப் பெறவில்லை. இருந்தாலும் தமிழ் சினிமா மீதுள்ள ஆர்வத்தில் மூன்றாவது முறையாக 'சந்திரமுகி 2' படத்தின் மூலம் மீண்டும் வருகிறார். அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது. முதலிரண்டு படங்கள் அவருக்கு சிறப்பாக அமையாத நிலையில் 'சந்திரமுகி 2' கங்கனாவுக்கு கவனம் ஈர்க்கும் படமாக அமையுமா என்பது படம் வெளிவரும் போது தெரியும்.