'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
மலையாள திரையுலகில் பிஸியான நடிகராக நடித்துவரும் பிரித்விராஜ், வெற்றிகரமான இயக்குனராகவும் வலம் வருகிறார். அதே சமயம் மலையாள திரையுலகோடு தனது எல்லையை சுருக்கி கொள்ளாமல் தென்னிந்திய மொழிகளிலும் அதைத் தாண்டி பாலிவுட்டிலும் நல்ல படங்கள் தேடி வரும்போது நடிக்கிறார். அந்த வகையில் தற்போது தெலுங்கில் கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் பிரித்விராஜ்..
இந்த நிலையில் ஏற்கனவே ஹிந்தியில் மூன்று படங்களில் நடித்துள்ள பிரித்விராஜ் மீண்டும் தற்போது படே மியான் சோட்டா மியான் என்கிற படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் அக்சய் குமார், டைகர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். டைகர் ஜிந்தகி படத்தை இயக்கிய அலி அப்பாஸ் ஜாபர் இந்த படத்தை இயக்குகிறார்.
இந்த கிரேஸி ஆக்சன் ரோலர்கோஸ்டர் (பிரித்விராஜ்) வரவால் இந்த படே மியான் குடும்பம் இன்னும் பெரிதாகி உள்ளது என அவரை வரவேற்றுள்ளார் நடிகர் அக்சய் குமார்.