கமல் சாரை பற்றி தப்பா பேசாதீங்க! - சர்ச்சை குறித்து ஆவேசமாக பேசிய சிவராஜ்குமார் | கார்த்தியின் 'கைதி- 2' படப்பிடிப்பு: டிசம்பர் மாதத்தில் தொடங்குகிறது! | அபிஷன் ஜீவிந்த் மூலம் எனக்கு கிடைத்த புகழ்! - சசிகுமார் நெகிழ்ச்சி | சூர்யா 45வது படம் பண்டிகை நாளில் வெளியாகும்! - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தகவல் | பெங்களூரு காவல் நிலையத்தில் கமல்ஹாசன் மீது புகார்! வழக்கை பதிவு செய்யாத போலீசார் | 'பாஸ் என்கிற பாஸ்கரன் 2' வருமா? | ஹீரோயினை விட ஒரு பாடலுக்கு ஆடும் ராஷ்மிகாவுக்கு அதிக சம்பளம் | நிதிஅகர்வாலுடன் நடித்தால் துணை முதல்வரா? | எப்போதான் முடியும் ரவிமோகன் - ஆர்த்தி சண்டை? | 'தக்லைப்' படத்தில் போலீசாக வருகிறாரா திரிஷா? |
பாலிவுட்டின் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா. தமிழில் விஜய் நடித்த தமிழன் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் அதன்பின் பாலிவுட்டில் டாப் ஹீரோயினாக வளர்ந்தார். ஹாலிவுட் வரை சென்றவர் அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்து, வாடகைத் தாய் மூலம் குழந்தையும் பெற்றார். சினிமாவில் நடிகைகளுக்கு சம்பள விஷயத்தில் பாகுபாடு காட்டப்படுகிறது என குற்றம் சாட்டுகிறார் பிரியங்கா.
அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது : ‛‛எனது நிறத்தை வைத்து என்னை ‛கருப்பு பூனை' என கிண்டல் செய்தனர். சினிமாவில் ஆண் நடிகர்களுக்கே சம்பளம் அதிகமாக வழங்கப்படுகிறது. அவர்களின் சம்பளத்தில் 10 சதவீதம் மட்டுமே நான் பெற்றேன். நான் மட்டுமல்லாது பல நடிகைகளுக்கு இது இன்னமும் தொடர்கிறது. மேலும் படப்பிடிப்பில் நடிகைகள் நீண்டநேரம் காத்திருக்கணும், நடிகர்களுக்கு அப்படி இல்லை, நேரத்திற்கு வந்து செல்வர். ஹாலிவுட்டிலும் இந்த நிலை உள்ளது'' என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.