ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள திரையுலகில் பிஸியான நடிகராக நடித்துவரும் பிரித்விராஜ், வெற்றிகரமான இயக்குனராகவும் வலம் வருகிறார். அதே சமயம் மலையாள திரையுலகோடு தனது எல்லையை சுருக்கி கொள்ளாமல் தென்னிந்திய மொழிகளிலும் அதைத் தாண்டி பாலிவுட்டிலும் நல்ல படங்கள் தேடி வரும்போது நடிக்கிறார். அந்த வகையில் தற்போது தெலுங்கில் கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் பிரித்விராஜ்..
இந்த நிலையில் ஏற்கனவே ஹிந்தியில் மூன்று படங்களில் நடித்துள்ள பிரித்விராஜ் மீண்டும் தற்போது படே மியான் சோட்டா மியான் என்கிற படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் அக்சய் குமார், டைகர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். டைகர் ஜிந்தகி படத்தை இயக்கிய அலி அப்பாஸ் ஜாபர் இந்த படத்தை இயக்குகிறார்.
இந்த கிரேஸி ஆக்சன் ரோலர்கோஸ்டர் (பிரித்விராஜ்) வரவால் இந்த படே மியான் குடும்பம் இன்னும் பெரிதாகி உள்ளது என அவரை வரவேற்றுள்ளார் நடிகர் அக்சய் குமார்.