விக்ரமின் ‛துருவ நட்சத்திரம்' விரைவில் திரையில் மின்னப் போகிறது | வைரலாகும் விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகம் | மகிழ்திருமேனிக்கு அஜித் போட்ட உத்தரவு | தனுஷின் வாத்தி டிரைலர் நாளை வெளியாகிறது | என்னை வேவு பார்ப்பவர்களை வீடு புகுந்து அடிப்பேன் : கங்கனா ஆவேசம் | கடும் குளிரில் விஜய் படக்குழுவினர் அவதி: சென்னை திரும்பினார் த்ரிஷா | ஹீரோயின் ஆன யு-டியூப் பிரபலம் | 'லியோ' படத்திற்கு இப்போதே முன்பதிவு ஆரம்பம் | ‛ரைட்டர் பத்மபூஷன்' படம் பாருங்கள் ; சிபாரிசு செய்யும் மகேஷ்பாபு | பதான் இயக்குனருடன் சேர்ந்து பிரபாஸ் - ஹிருத்திக் படத்தை புதுப்பிக்கும் புஷ்பா தயாரிப்பாளர்கள் |
‛மாநாடு, வெந்து தணிந்தது காடு' படங்களுக்கு பின் ‛பத்து தல' படத்தில் நடித்துள்ளார் சிம்பு. படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. சிம்பு இன்னும் திருமணம் செய்யாமல் உள்ளார். அவர் வாழ்வில் சில காதல் தோல்விகளும் வந்து சென்றன. தொடர்ந்து சிம்புவிற்கு ஏற்ற மணமகளை தேடி வருவதாக அவரது தந்தை டி.ராஜேந்தர் கூறி வருகிறார்.
இந்நிலையில் காஞ்சிபுரம், வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் டி ராஜேந்தர் சாமி தரிசனம் செய்தார். சிம்புவின் ஜாதகத்தை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‛‛என் மகனுக்கு ஏற்ற மணகளை, எங்கள் வீட்டிற்கு வரப்போகும் குலமகளை நாங்கள் தேர்வு செய்வதை விட இறைவன் தான் தேர்வு செய்து கொடுக்கணும். அதனால் தான் இந்த வழக்கை வழக்கறுத்தீஸ்வரரிடமே ஒப்படைத்துவிட்டேன். கடவுள் அருளால் சிலம்பரசனுக்கு விரைவில் திருமணம் நடக்கும்'' என்றார் டி ராஜேந்தர்.