ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது பிரபாஸ் உடன் சலார், சிரஞ்சீவியுடன் வால்டர் வீரய்யா, பாலகிருஷ்ணா உடன் வீரசிம்ஹா ரெட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் வால்டர் வீரய்யா, வீரசிம்ஹா ரெட்டி ஆகிய இரண்டு படங்களுமே படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு படங்களுமே ஜனவரி மாதம் சங்கராந்தி விழாவின் போது திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஸ்ருதிஹாசன் நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் அவரது ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர். அதோடு ட்ரெண்டிங் செய்கிறார்கள். இது தவிர ‛தி ஐ' என்ற ஹாலிவுட் படத்திலும் தற்போது ஸ்ருதிஹாசன் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.