முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு | “என் மகள் எனக்கு மூன்றாம் மனுஷி தான்.. அஞ்சு பைசா கூட தரமாட்டேன்” ; ஸ்வேதா மேனன் ஓபன் டாக் | எட்டு வருடத்திற்கு பிறகு மீண்டும் இணையும் துருவா சார்ஜா, ரச்சிதா ராம் ஜோடி | 'விலாயத் புத்தா' கதையும் 'புஷ்பா' கதையும் ஒன்றா ? பிரித்விராஜ் விளக்கம் | அதிதி ராவ் ஹைதரி பெயரில் வாட்ஸ்அப்பில் மோசடி ; நடிகை எச்சரிக்கை |

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. அவருக்கு தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி அவரையும் 'நந்தா' படத்தின் மூலம் திறமையான நடிகராக மாற்றியவர் இயக்குனர் பாலா. 19 ஆண்டுகளுக்குப் பிறகு பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிவிட்டார். நடிப்பதாக அறிவித்து பின்னர் சூர்யா விலகிய மூன்றாவது படம் இது.

இதற்கு முன்பு அவருக்கு கமர்ஷியல் அடையாளத்தை 'காக்க காக்க' படத்தின் மூலம் ஏற்படுத்தித் தந்த கவுதம் மேனன் இயக்கத்தில் 'துருவ நட்சத்திரம்' படத்தில் நடிப்பதாக அறிவித்து பின் விலகினார். அதற்குப் பிறகு 'சிங்கம்' படத்தின் மூலம் மிகப் பெரும் வசூலை சூர்யாவுக்கு ஏற்படுத்தித் தந்த ஹரி இயக்கத்தில் அறிவிக்கப்பட்ட 'அருவா' படத்திலிருந்தும் விலகினார். இப்போது 'வணங்கான்' படத்திலிருந்தும் விலகியுள்ளார்.
சூர்யா நடிக்க கவுதம் மேனன் இயக்கத்தில் ஒரு படமும், ஹரி இயக்கத்திலும் சூர்யா நடிக்க மற்றொரு படமும் எதிர்காலத்தில் நடக்க வாய்ப்புள்ளது. அதற்கான பேச்சு வார்த்தைகள் ஏற்கெனவே முடிந்துள்ளதாகச் சொல்கிறார்கள். அது போல பாலா இயக்கத்தில் இனி சூர்யா நடிப்பாரா என்பதை பாலா மட்டுமே முடிவு செய்வார் என்று சொல்கிறார்கள்.