நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமாகி, பின்பு பிரபலமான நடிகைகளில் ஒருவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுசுன் கொடி, அதர்வாவுடன் தள்ளிபோகாதே படங்களில் நடித்தார். அதன்பிறகு அவருக்கு இங்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தெலுங்கில் பிஸியாக நடித்து முன்னணி நடிகை ஆகிவிட்டார்.
தற்போது அவர் ஏற்கெனவே வெளிவந்து வெற்றி பெற்ற தெலுங்கு படமான டிஜே தில்லு படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வந்தார். இந்த படத்தில் சித்து ஜோன்னலசட்டா நாயகனாக நடித்து வந்தார். ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வந்தது. படப்பிடிப்பு தளத்தில் சித்து - அனுபமா இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாகவும், இருவரையும் சமாதானப்படுத்த இயக்குனர் முயன்றும் முடியவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.. இருவரும் கோபமாக படப்பிடிப்பு தளத்தை விட்டு வெளியேறி உள்ளனர். படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
அதன்பிறகு படத்திலிருந்து விலகிய அனுபமாக தான் பெற்றிருந்த முன்பணத்தையும் தயாரிப்பாளருக்கு திருப்பி அனுப்பிவிட்டதாக தயாரிப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கிறது. தற்போது அனுபமா நடிக்க இருந்த கேரக்டரில் மடோனா செபஸ்டின் நடிக்க இருக்கிறார்.