விக்ரமின் ‛துருவ நட்சத்திரம்' விரைவில் திரையில் மின்னப் போகிறது | வைரலாகும் விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகம் | மகிழ்திருமேனிக்கு அஜித் போட்ட உத்தரவு | தனுஷின் வாத்தி டிரைலர் நாளை வெளியாகிறது | என்னை வேவு பார்ப்பவர்களை வீடு புகுந்து அடிப்பேன் : கங்கனா ஆவேசம் | கடும் குளிரில் விஜய் படக்குழுவினர் அவதி: சென்னை திரும்பினார் த்ரிஷா | ஹீரோயின் ஆன யு-டியூப் பிரபலம் | 'லியோ' படத்திற்கு இப்போதே முன்பதிவு ஆரம்பம் | ‛ரைட்டர் பத்மபூஷன்' படம் பாருங்கள் ; சிபாரிசு செய்யும் மகேஷ்பாபு | பதான் இயக்குனருடன் சேர்ந்து பிரபாஸ் - ஹிருத்திக் படத்தை புதுப்பிக்கும் புஷ்பா தயாரிப்பாளர்கள் |
சென்னையில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் சமீபத்தில் சிரித்து வாழ வேண்டும் என்ற படம் டிஜிட்டலில் வெளிவருவதை தியேட்டரில் விழாவாக கொண்டாடினார்கள். இதேபோல மதுரையில் சிவாஜி நடித்த பட்டிக்காடா பட்டணமா படத்தின் 50 வது ஆண்டு விழாவை சிவாஜி ரசிகர்கள் கொண்டாடினார்கள். மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
சிவாஜி மகன் ராம்குமார், மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதி சண்முகையா, நடிகர்கள் ஒய்.ஜி. மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏராளமான ரசிகர்களும் கலந்து கொண்டனர். ரசிகர்கள் குடும்பத்துடன் வந்து படத்தை பார்த்து ரசித்தனர்.
கடந்த 1972ம் ஆண்டு பி.மாதவன் இயக்கத்தில் வெளிவந்த 'பட்டிக்காடா பட்டணமா' படத்தில் சிவாஜி, ஜெயலலிதா மனோரமா, உள்ளிட்ட பலரும் நடித்தனர். மதுரை சோழவந்தானில் படமாக்கப்பட்டது. கிராமப்புற வாழ்க்கையின் மகிமையை நகரத்து நாயகிக்கு நாயகன் புரிய வைப்பதுதான் படத்தின் ஒருவரிக்கதை.