காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
சென்னையில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் சமீபத்தில் சிரித்து வாழ வேண்டும் என்ற படம் டிஜிட்டலில் வெளிவருவதை தியேட்டரில் விழாவாக கொண்டாடினார்கள். இதேபோல மதுரையில் சிவாஜி நடித்த பட்டிக்காடா பட்டணமா படத்தின் 50 வது ஆண்டு விழாவை சிவாஜி ரசிகர்கள் கொண்டாடினார்கள். மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
சிவாஜி மகன் ராம்குமார், மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதி சண்முகையா, நடிகர்கள் ஒய்.ஜி. மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏராளமான ரசிகர்களும் கலந்து கொண்டனர். ரசிகர்கள் குடும்பத்துடன் வந்து படத்தை பார்த்து ரசித்தனர்.
கடந்த 1972ம் ஆண்டு பி.மாதவன் இயக்கத்தில் வெளிவந்த 'பட்டிக்காடா பட்டணமா' படத்தில் சிவாஜி, ஜெயலலிதா மனோரமா, உள்ளிட்ட பலரும் நடித்தனர். மதுரை சோழவந்தானில் படமாக்கப்பட்டது. கிராமப்புற வாழ்க்கையின் மகிமையை நகரத்து நாயகிக்கு நாயகன் புரிய வைப்பதுதான் படத்தின் ஒருவரிக்கதை.