பிளாஷ்பேக்: ஸ்ரீதேவி தான் வேண்டும் என்று அடம்பிடித்த ரஜினி | பிளாஷ்பேக் : 'மனோகரா' கதை ஷேக்ஸ்பியர் எழுதியது | ஒரே நேரத்தில் இரு லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படமா? | சூப்பர் மாரி சூப்பர் : ‛பைசன்' படத்திற்கு ரஜினி பாராட்டு | ‛பரிசு' : லட்சியத்திற்காக போராடும் பெண்ணின் கதை | ஒரு ‛என்' சேர்த்தால், வாழ்க்கை மாறிடுமா? : ஹன்சிகாவின் ஆசை | தெலுங்கில் 100 கோடி வசூலித்த 'காந்தாரா சாப்டர் 1' | 'கப்ஜா' படத்தால் 'இன்ஸ்பயர்' ஆன 'ஓஜி' : இயக்குனர் கருத்தால் சர்ச்சை | விஜய்யின் 'முரசு' படம் நின்று போக இப்படி ஒரு காரணமா ? 20 வருடம் கழித்து வெளியான தகவல் | முதன்முதலாக குழந்தையை அறிமுகப்படுத்திய தீபிகா, ரன்வீர் சிங் |

தமிழ் சினிமாவின் எவர் கிரீன் காமெடி நடிகர்களில் கவுண்டமணியும் ஒருவர். தொடர்ச்சியாக காமெடி வேடங்களில் நடித்தவர் ஒருக்கட்டத்தில் சினிமாவை விட்டு சற்று விலகியிருந்தார். நீண்ட இடைவெளிக்கு பின் சில ஆண்டுகளுக்கு முன் எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, 49 ஓ ஆகிய படங்களில் கதையின் நாயகனாக நடித்தார். அதன்பிறகு சில படங்களில் கேரக்டர் ரோலில் நடித்தார். கடந்த 6 ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காதவர் தற்போது பழனிச்சாமி வாத்தியார் என்ற படத்தில் ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியராக நடிக்கப் போகிறார். இந்த படத்தை பேயை காணோம் என்ற படத்தை இயக்கிய செல்வ அன்பரசன் இயக்குகிறார். வருகிற ஜனவரி மாதத்தில் இருந்து இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. முக்கியமாக, இந்த பழனிச்சாமி வாத்தியார் படத்தில் கவுண்டமணியுடன் தனுஷ் அல்லது சிவகார்த்திகேயனை கெஸ்ட் ரோலில் நடிக்க வைப்பதற்கான முயற்சிகளும் நடக்கின்றன.




