பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. லைக்கா தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் வருகின்ற டிசம்பர் 9-ஆம் தேதி வெளியாக இருக்கிறது .
சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாடலான 'அப்பத்தா பாடல்' வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து பணக்காரன் என தொடங்கும் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலையும் வடிவேலு தான் பாடி உள்ளார். அவரது நய்யாண்டி பேச்சு ஸ்டைலில் இந்த பாடல் உருவாகி உள்ளது. அவருடன் சந்தோஷ் நாராயணனும் இணைந்து பாடி உள்ளார். விவேக் எழுதி உள்ளார். பாடல் வெளியான 16 மணிநேரத்தில் 21 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளன. தொடர்ச்சியாக ஒரே படத்தில் வடிவேலு இரண்டு பாடல்களை பாடி உள்ளது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
இந்த படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடிகை ஷிவாணி நாராயணன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.