இந்தியன் 2 படத்தை விட குறைவாக வசூலித்த தக் லைப் | மீண்டும் தள்ளிப் போகும் 'ஹரிஹர வீர மல்லு' | சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? | நீதிமன்றத் தீர்ப்பை ஏற்பாரா? மேல் முறையீடு செய்வாரா விஷால்? | நடிப்பா? தயாரிப்பா?: யோசனையில் ரம்பா | மம்பட்டியான் பாடல் காப்பிரைட் : நடிகர் தியாகராஜன் பெருந்தன்மை | தருமபுரி அருகே கார் விபத்து : மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ காயம், தந்தை பரிதாப பலி | தக் லைப் படத்தில் காணாமல் போன ஜாதிப்பெயர் | மத மாற்ற விவகாரத்தை பேசும் பரமசிவன் பாத்திமா | நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த 'டிஎன்ஏ' ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. லைக்கா தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் வருகின்ற டிசம்பர் 9-ஆம் தேதி வெளியாக இருக்கிறது .
சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாடலான 'அப்பத்தா பாடல்' வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து பணக்காரன் என தொடங்கும் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலையும் வடிவேலு தான் பாடி உள்ளார். அவரது நய்யாண்டி பேச்சு ஸ்டைலில் இந்த பாடல் உருவாகி உள்ளது. அவருடன் சந்தோஷ் நாராயணனும் இணைந்து பாடி உள்ளார். விவேக் எழுதி உள்ளார். பாடல் வெளியான 16 மணிநேரத்தில் 21 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளன. தொடர்ச்சியாக ஒரே படத்தில் வடிவேலு இரண்டு பாடல்களை பாடி உள்ளது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
இந்த படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடிகை ஷிவாணி நாராயணன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.