‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! | உங்களை விட்டால் யார் இருக்கா ? அனுஷ்காவிடம் ராணா கலாட்டா | பிஜூமேனன் நடிப்பதாக இருந்த ‛கீர்த்தி சக்ரா' ; மோகன்லாலுக்கு கை மாறியது ஏன் ? இயக்குனர் மேஜர் ரவி புதிய தகவல் | நிவின்பாலியின் படங்களை பாராட்டிய பவன் கல்யாண் | ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா' | யார் இடத்தையும் யாரும் பிடிக்கவில்லை: சிவகார்த்திகேயன் |
சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. லைக்கா தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் வருகின்ற டிசம்பர் 9-ஆம் தேதி வெளியாக இருக்கிறது .
சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாடலான 'அப்பத்தா பாடல்' வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து பணக்காரன் என தொடங்கும் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலையும் வடிவேலு தான் பாடி உள்ளார். அவரது நய்யாண்டி பேச்சு ஸ்டைலில் இந்த பாடல் உருவாகி உள்ளது. அவருடன் சந்தோஷ் நாராயணனும் இணைந்து பாடி உள்ளார். விவேக் எழுதி உள்ளார். பாடல் வெளியான 16 மணிநேரத்தில் 21 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளன. தொடர்ச்சியாக ஒரே படத்தில் வடிவேலு இரண்டு பாடல்களை பாடி உள்ளது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
இந்த படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடிகை ஷிவாணி நாராயணன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.