ரஜினி நினைக்கும் விஷயம் | விக்னேஷ்சிவன், நயன்தாரா ஊடலா? | திருநெல்வேலியில் சிம்ரன் பேசியது ஏன்? | விஜய்சேதுபதிக்கு அடுத்த வெற்றி கிடைக்குமா? | நான் பெருமாள் பக்தன், அவரை கிண்டல் செய்யவில்லை : நடிகர் சந்தானம் சரண்டர் | நானியின் 'ஹிட் 3' படம் 'சூப்பர் ஹிட்' பட்டியலில் சேருமா ? | 'ஏழு கடல் ஏழு மலை' படத்திற்கு முன்பாக ராமின் 'பறந்து போ' ரிலீஸ் | பட்ஜெட்டை விட 3 மடங்கு அதிகம் வசூலித்த 'டூரிஸ்ட் பேமிலி' | பெருமாளை இழிவுபடுத்தி பாடிய நடிகர்கள் சந்தானம், ஆர்யா மீது புகார் | ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி |
தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளின் மூலம் சின்னத்திரை நேயர்களுக்கு பரிட்சயமானவர் குமரன் தங்கராஜன். அதன் பின் சீரியல் சினிமா என நடிகராக உருவெடுத்தார். தற்போது விஜய் டிவியின் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 2015ம் ஆண்டிலேயே குமரன் 'இது என்ன மாயம்' என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார். எனினும், தொடர்ந்து அவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இந்நிலையில் 7 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு அவர் வெள்ளித்திரை கலைஞர்களுடன் இணைந்துள்ளார். ஓடிடி தளத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் 'வதந்தி' என்கிற வலைத்தொடர் விரைவில் வெளியாகவுள்ளது. க்ரைம் திரில்லராக உருவாகியுள்ள இந்த வலைத்தொடரின் புரோமோ ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், குமரன் தங்கராஜனும் நடித்துள்ளார். டீசரில் குமரன் தங்கராஜனின் கெட்டப்பை பார்க்கும் போது படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது தெளிவாகிறது. இதனயடுத்து குமரனின் ரசிகர்கள் பலரும் அவரது திரைப்பயணம் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.