பிளாஷ்பேக்: சித்ராவை ஏமாற்றிய முதல் பாடல் | படம் இயக்கவே சினிமாவிற்கு வந்தேன்: செம்மலர் அன்னம் | சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வரும் இயக்குனர் | 10 கோடிக்கு கார் வாங்கிய அட்லி | பிளாஷ்பேக்: தமிழில் ரீமேக் ஆன சார்லி சாப்ளின் படம் | பிளாஷ்பேக்: சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவருக்கு அதிர்ஷ்டத்தை வழங்கிய “ஆராய்ச்சி மணி” | 50 கோடி வசூலைக் கடந்த 'பைசன்' | தமிழில் இயக்குனர் ஆனார் ஷாலின் ஜோயா : 90களில் நடக்கும் கதை, பிரிகிடா ஹீரோயின் | பொங்கல் ரேசில் இணைந்த இன்னொரு படம் | 'ப்ரோ கோடு' தலைப்பிற்கு சிக்கல்: டில்லி உயர்நீதிமன்ற தடையால் தலைவலி |

தெலுங்கு சினிமாவின் மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத். சங்கராபரணம் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி உள்ளார். தமிழில் குருதிப்புனல், முகவரி, ராஜபாட்டை, யாரடி நீ மோகினி, லிங்கா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். வயது மூப்பு காரணமாக சினிமாவிலிருந்து விலகி ஐதராபாத்தில் தனது குடும்பத்துடன் ஓய்வெடுத்து வருகிறார் விஸ்வநாத்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் ஐதராபாத் சென்றிருந்தார். அப்போது கே.விஸ்வநாத்தை அவரது அவரது வீட்டிற்கே நேரில் சென்று பார்த்து, ஆசி பெற்றுள்ளார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்துள்ளது. கமலை வைத்து தெலுங்கில் சாகர சங்கமம்( தமிழில் சலங்கை ஒலி) என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர் விஸ்வநாத். அதோடு கமலின் குருதிப்புனல், உத்தமவில்லன் போன்ற படங்களிலும் இவர் நடித்துள்ளார்.