எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் | கேன்ஸில் பிரதிபலித்த ‛சிந்தூர்' : பார்வையாளர்களை கவர்ந்த ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் | காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில் | குத்துப்பாடலில் சர்ச்சையான வரிகளை நீக்க சொன்ன பவன் கல்யாண் ; மரகதமணி தகவல் | பண மோசடி வழக்கில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்த தீபிகா படுகோனே : வெளியேறவில்லை.. வெளியேற்றப்பட்டார் | போலீஸ் பாதுகாப்பை மீறி சல்மான் கான் வீட்டுக்கு செல்ல முயன்ற பெண் கைது | மைசூர் சாண்டல் சோப் தூதராக தமன்னா நியமனம் : வலுக்கும் எதிர்ப்பு |
தெலுங்கு சினிமாவின் மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத். சங்கராபரணம் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி உள்ளார். தமிழில் குருதிப்புனல், முகவரி, ராஜபாட்டை, யாரடி நீ மோகினி, லிங்கா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். வயது மூப்பு காரணமாக சினிமாவிலிருந்து விலகி ஐதராபாத்தில் தனது குடும்பத்துடன் ஓய்வெடுத்து வருகிறார் விஸ்வநாத்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் ஐதராபாத் சென்றிருந்தார். அப்போது கே.விஸ்வநாத்தை அவரது அவரது வீட்டிற்கே நேரில் சென்று பார்த்து, ஆசி பெற்றுள்ளார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்துள்ளது. கமலை வைத்து தெலுங்கில் சாகர சங்கமம்( தமிழில் சலங்கை ஒலி) என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர் விஸ்வநாத். அதோடு கமலின் குருதிப்புனல், உத்தமவில்லன் போன்ற படங்களிலும் இவர் நடித்துள்ளார்.