லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

தமிழ் சினிமாவில் இப்போதுள்ள இளம் கதாநாயகர்களில் நம்பிக்கை கொடுக்கும் அளவிற்கு தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தவர் அதர்வா. கதாநாயகனாக அறிமுகமாகி பத்து வருடங்களைக் கடந்தாலும் இன்னும் முன்னணி கதாநாயகர்கள் வரிசையில் இடம் பிடிக்காமல் தவித்து வருகிறார். அவர் சரியாகத் தேர்வு செய்யாத சில கதைகள்தான் அதற்குக் காரணமாக அமைந்தன.
கடந்த பத்து வருடங்களில் 15 தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அவற்றில் வியாபார ரீதியாக 'ஈட்டி, இமைக்கா நொடிகள்' ஆகிய படங்கள் மட்டுமே குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றன. 'இமைக்கா நொடிகள்' படத்திற்குப் பிறகு கடந்த நான்கு வருடங்களில் அவர் நடித்து வெளிவந்த 'பூமராங், 100, தள்ளிப் போகாதே, குருதி ஆட்டம், ட்ரிகர்' ஆகிய படங்கள் அவருக்கு வெற்றியைத் தரவில்லை.
சற்குணம் இயக்கத்தில் அவர் நடித்துள்ள 'பட்டத்து அரசன்' படம் இந்த வாரம் நவம்பர் 25ம் தேதி வெளியாக உள்ளது. குடும்பக் கதையாக உருவாகியுள்ள இந்தப் படமாவது அதர்வாவுக்கு வெற்றியைத் தந்தால்தான் தொடர் தோல்விகளில் இருந்து அவர் தப்பிக்க முடியும். 2014ல் வெளிவந்த 'மஞ்சப் பை' படத்திற்குப் பிறகு இயக்குனர் சற்குணமும் நல்லதொரு வெற்றிக்காகத்தான் காத்திருக்கிறார். 'சண்டி வீரன்' படத்திற்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள இந்த சற்குணம், அதர்வா கூட்டணிக்கு வெற்றியைத் தருவாரா இந்த 'பட்டத்து அரசன்' ?