92வது வருடத்தில் தெலுங்கு சினிமா | 3வது முறை கிராமி விருது வென்று அசத்திய இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் | போட்டியாக இருந்த சீரியலுக்கே ஹீரோவாக என்ட்ரி கொடுத்த சிபு சூரியன் | ராடானுடன் கைகோர்த்த எஸ்.ஏ.சந்திரசேகர்! விரைவில் சின்னத்திரை என்ட்ரி | கவர்ச்சிக்கு வயது தடை கிடையாது ? : இத்தனை வயதிலும் அசத்தும் ஸ்ரேயா | 'டிரோல்'களுக்கு பதிலடி கொடுத்த தமன் | 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகும் ரஜினி - கமல் படங்கள்! | விஜய்யின் ‛லியோ' படத்தின் கதை குறித்து புதிய தகவல் வெளியானது! | ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் கேட்கும் மிஷ்கின்! | அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! |
பொன்னியின் செல்வனுக்கு முன், பொன்னியின் செல்வனுக்கு பின் என திரிஷாவின் திரையுலக பயணத்தை இரண்டாக பிரிக்கும் அளவுக்கு பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றியும், அதில் அவர் ஏற்று நடித்த குந்தவை கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பும் அவரது அடுத்த இன்னிங்ஸை மீண்டும் பரபரப்பாக துவங்கி வைத்துள்ளது. அந்த வகையில் பல வருடங்கள் கழித்து அடுத்து மீண்டும் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்தநிலையில் புதிய முயற்சியாக வெப் சீரிஸிலும் காலடி எடுத்து வைத்துள்ளார் திரிஷா. இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகி வரும் பிருந்தா என்கிற வெப் சீரிஸில் நடித்துள்ள திரிஷா, இதில் முதன்முறையாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் சூர்யா வங்கலா என்பவர் இந்த வெப்சீரிஸை இயக்கியுள்ளார்.
தெலுங்கில் தயாராகும் இந்த வெப்சீரிஸ் பின்னர் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளில் டப் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் இந்த வெப்சீரிஸ் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ள திரிஷா இதன் முதல் பாகம் 'ஆன் தி வெ' என்றும் கூறியுள்ளார்..