சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
பொன்னியின் செல்வனுக்கு முன், பொன்னியின் செல்வனுக்கு பின் என திரிஷாவின் திரையுலக பயணத்தை இரண்டாக பிரிக்கும் அளவுக்கு பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றியும், அதில் அவர் ஏற்று நடித்த குந்தவை கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பும் அவரது அடுத்த இன்னிங்ஸை மீண்டும் பரபரப்பாக துவங்கி வைத்துள்ளது. அந்த வகையில் பல வருடங்கள் கழித்து அடுத்து மீண்டும் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்தநிலையில் புதிய முயற்சியாக வெப் சீரிஸிலும் காலடி எடுத்து வைத்துள்ளார் திரிஷா. இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகி வரும் பிருந்தா என்கிற வெப் சீரிஸில் நடித்துள்ள திரிஷா, இதில் முதன்முறையாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் சூர்யா வங்கலா என்பவர் இந்த வெப்சீரிஸை இயக்கியுள்ளார்.
தெலுங்கில் தயாராகும் இந்த வெப்சீரிஸ் பின்னர் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளில் டப் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் இந்த வெப்சீரிஸ் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ள திரிஷா இதன் முதல் பாகம் 'ஆன் தி வெ' என்றும் கூறியுள்ளார்..