'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடி தானா? | கென் கருணாஸூக்காக காய்ச்சல் உடன் வந்த தனுஷ்! | மார்ச் 16ல் 'நூறு சாமி' படத்தின் பர்ஸ்ட் லுக் | இரண்டு பாகங்களாக பிரியும் இதயம் முரளி! | மே மாதத்தில் திட்டமிடும் 'கருப்பு' படக்குழு! | மென்மையானவர் விஜய்... நல்ல குடும்பஸ்தர் அஜித்: மனம் திறந்த தமன்னா | 'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? |

ஒரே நாளில் வெளியான இரண்டு பிராந்திய மொழித் திரைப்படங்கள் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்திய சினிமாவில் புதிய சாதனையைப் படைத்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி தமிழில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படம் 500 கோடி வசூலைக் கடந்தது. அதே நாளில் வெளியான கன்னடப் படமான 'காந்தாரா' படம் 400 கோடி வசூலைக் கடந்துள்ளது. 'பொன்னியின் செல்வன்' படத்தின் பட்ஜெட்டோடு ஒப்பிடுகையில் 'காந்தாரா' படத்தின் வசூல் மிகப் பெரியது.
'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டு பாகங்களும் சேர்ந்து 200 கோடிக்கும் அதிகமான பட்ஜெட் என்கிறார்கள். முதல் பாகத்திற்கான செலவு 100 கோடிக்கும் கூடுதலாக இருக்கலாம். அதே சமயம், 'காந்தாரா' படம் வெறும் 16 கோடி ரூபாய் செலவில் மட்டுமே எடுக்கப்பட்ட ஒரு படம் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவில் 170 கோடி, வட இந்தியாவில் 95 கோடி, தெலுங்கில் 60 கோடி, வெளிநாடுகளில் 45 கோடி, கேரளாவில் 20 கோடி, தமிழகத்தில் 12 கோடி என இப்படம் 400 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'கேஜிஎப் 2' படத்திற்குப் பிறகு கன்னடப் படமான 'காந்தாரா' 400 கோடி வசூலைக் கடந்துள்ளது. இரண்டு படங்களுமே இந்த ஆண்டில் வெளிவந்தவை என்பது முக்கியமானது.
100 கோடி பட்ஜெட்டில் தயாரான 'கேஜிஎப் 2' படம் 1200 கோடி வரை வசூலித்தது என்கிறார்கள். இரண்டு படங்களின் லாபத்தையும் சேர்த்தால் 1500 கோடி வரும். இந்திய சினிமாவில் இந்த வருடத்தில் வேறு எந்த மொழிப் படங்களும் இப்படி ஒரு சாதனையைப் படைத்ததில்லை. இந்த இரண்டு கன்னடப் படங்களின் வசூல், லாபம் இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது.




