இளையராஜாவின் பெயரில் விருது வழங்கப்படும்; பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | இளையராஜாவிற்கு பாராட்டு விழா : அரங்கம் அதிர இன்னிசை மழை ; முதல்வர், ரஜினி, கமல் பங்கேற்பு | நான் சரியான வாழ்க்கை துணையாக மாற முயற்சிக்கிறேன் : தமன்னா | கருவிலே உயிர் உருவாகும்போது உயிர் கொடுத்தவன் கடமையை மறக்கக்கூடாது : ஜாய் கிரிசில்டா பதிவு | ‛‛நான் தான் சிஎம்'' : பார்த்திபன் வெளியிட்ட அறிவிப்பு | சேதுராஜன் ஐபிஎஸ் : மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் பிரபுதேவா | மீண்டும் ஒரு சர்வைவல் திரில்லரில் நடிக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரின் அரசியல் படத்தில் கைகோர்த்த நிவின்பாலி | ஹன்சிகா மீது பதியப்பட்ட எப்ஐஆரை தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இளையராஜா இசையில் உருவாகும் ஈழத்தமிழ் படம் |
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தவர் சந்தானம். கதாநாயகன் ஆசையில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு 'இனிமே இப்படித்தான்' படம் மூலம் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார். அதற்குப் பிறகு அவர் கதாநாயகனாக நடித்து இதுவரை 10 படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் 'தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2, ஏ 1, டகால்ட்டி, பாரிஸ் ஜெயராஜ்' ஆகிய படங்கள்தான் வெற்றிப் படங்களாக அமைந்தன.
கடந்த வருடம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான 'டிக்கிலோனா' படமும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தின் பல நகைச்சுவைக் காட்சிகள் வீடியோ மீம்ஸ்களாக வெளிவரும் அளவிற்கு அந்தப் படம் ரசிகர்களைக் கவர்ந்தது. அதற்குப் பிறகு அவர் நடித்து வெளிவந்த 'சபாபதி, குளு குளு' இரண்டு படங்களுமே ரசிகர்களை நிறையவே சோதித்தது. அடுத்து அவர் கதாநாயகனாக நடித்துள்ள 'ஏஜன்ட் கண்ணாயிரம்' படம் இந்த வாரம் 25ம் தேதி வெளிவருகிறது. இந்தப் படத்தைப் பற்றிப் பேசும் போது படத்தின் இயக்குனர் மனோஜ் பீதா, நகைச்சுவையை எதிர்பார்த்து வராதீர்கள் என்று சொல்லிவிட்டார்.
தெலுங்கில் 2019ம் ஆண்டு வெளிவந்த 'ஏஜன்ட் சாய் சீனிவாச ஆத்ரேயா' படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்தப் படம். தெலுங்கில் லாபரகமான படமாக அமைந்த இந்தப் படம் தமிழில் எப்படி அமையப் போகிறது என்பது இன்னும் இரண்டு நாட்களில் தெரிந்துவிடும்.