ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
பாலிவுட் சினிமாவில் பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் கனடாவை சேர்ந்த சன்னி லியோன். தற்போது தமிழ் சினிமாவில் ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். தீ இவன் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடி உள்ளார்.
சினிமாவில் நடிப்பது தவிர மேடை நிகழ்ச்சிகளில் நடனமாடி வருகிறார். அதன்படி கேரளாவில் ஒரு நிகழ்ச்சியில் நடனமாட ஒத்துக் கொண்டு 20 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார் சன்னி லியோன். அந்த நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடக்கவில்லை. இதற்கு காரணம் சன்னி லியோன்தான் என்றும் அவர் வாங்கிய சம்பளத்தை திருப்பித் தரவில்லை என்றும் அவர் மீது கேரள உயர்நீதி மன்றத்தில் மோசடி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தன் மீதான குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரம் இல்லாததால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கால் தனக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தான் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் சன்னி லியோன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்த நீதிபதி, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் வரை சன்னி லியோன் மீது எந்தவிதமான குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டது.